கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அரபிக் கல்லூரிகள் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு ஆட்கள் சேர்க்கப்பட்டதாக தனியாக ஒரு வழக்கு பதிவு செய்து இருந்தனர். விசாரணையில் மெட்ராஸ் அரபுக் கல்லூரியின் நிறுவனர் ஜமீல் பாஷா என்பவர் சிலருக்கு பயங்கரவாதத்திற்கு ஆள் சேர்ப்பதற்கான பயிற்சி அளித்திருப்பது தெரியவந்தது. அவர் சிலருடன் சேர்ந்து அரபு மொழி வகுப்பு என்ற பெயரில் பயங்கரவாதத்திற்கு ஆள் சேர்த்து வந்த பகீர் தகவல் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு கிடைத்தது.

தேசிய விரோத தீவிரமயமாக்கல் மற்றும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வகுப்பறைகள் மற்றும் சமூக தளத்தைப் பயன்படுத்தி வந்த ஜமீல் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகளான ஜமீல் பாஷா, முகமது உசேன் , இஸ்ரத், சையது, அப்துல் ரகுமான் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் தற்போது ஜவஹர் சாதிக் மற்றும் அகமது அலி ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை முகாம் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: “ஒருத்திக்கு ஆயிரம் என்பது இந்த காலம்” - மகளிர் குறித்து மட்டமான கமெண்ட்... ரூ.1000 உதவித்தொகையை நக்கலடித்தாரா நாஞ்சில் சம்பத்?

அதேபோல், பழனி அடுத்த நெய்க்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா முகமது (40) என்பவர் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். ராஜா முகமது தடை செய்யப்பட்ட ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் செயல்பட்டதாக கடந்த 2022 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை போலீஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர். நெய்க்காரப்பட்டியில் உள்ள ராஜா முகமது பின் வீட்டின் சோதனை மேற்கொண்ட தேசிய புலனாய்வு முகமை போலீசார் செல்போன் மடிக்கணினி உள்ளிட்டவைகளை அப்போது எடுத்துச் சென்றிருந்தனர்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் பழனிக்கு வந்த தேசிய புலனாய்வு முகமை போலீசார் ராஜா முகமது விடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பழனி நகர காவல் நிலையத்துக்கு ராஜா முகமதுவை அழைத்து வந்தனர். தொடர்ந்து விசாரணை செய்வதற்காக ராஜா முகமதுவை காரில் ஏற்றி கோவை அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: ஈரக்குலையே நடுங்குதே! அப்பளம் போல் நொறுங்கிய கார்.. 8 பேர் பலியான பெரும் சோகம்!