2023 செப்டம்பரில், கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்கு கால நிர்ணயம் செய்யும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணி விதிகளில் திருத்தங்கள் கொண்டுவர ஒரு குழு அமைத்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தாததால், சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வாறு, பல வழக்குகளில் அரசு உத்தரவை அமல்படுத்தத் தவறியது தெரிய வந்ததால் 2023 உத்தரவின் அடிப்படையில் குழு அமைக்கப்படவில்லை, அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை என நீதிபதி அதிருப்தி தெரிவித்து இருந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், 2023 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தலைமை செயலாளர்களாக இருந்தவர்கள் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவறாமல் ஜூலை 21 ஆம் தேதி அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: ஆகாஷ் பாஸ்கரன் மீதான மேல் நடவடிக்கைக்கு தடை.. டாஸ்மாக் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

செப்டம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை ஜூன் 11 ஆம் தேதி வரை அமல்படுத்தாமல் இருந்தது நீதிமன்ற அவமதிப்பு எனவும் அரசு ஊழியர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்புக்கு கால நிர்ணயம் செய்வது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வழக்கின் விசாரணை ஜூலை 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொது இடங்களில் கொடிக்கம்பங்கள்.. சின்ன அசைவுக்கூட இல்லை! கலெக்டர்களுக்கு வார்னிங்!