மதுரையில் 26 ஆண்டுகளில் இல்லாத வெப்ப அலையால் அவதியில் மக்கள்.பிற்பகல் வெளியில் செல்வதை தவிர்க்க பொதுமக்கள் அறிவுரை
கோடை காலமான ஏப்ரல், மே க்கு தென்மேற்கு பருவமழை மதுரையில் துவங்கும் .அதனை தொடர்ந்து ஜூன் - ஜூலையில் காற்று அதிகம் வீசும் போது வெப்பம் தணியும்.
கோடை காலங்களில் மதுரை கடந்த பல ஆண்டுகளாக வெப்பம் 100 முதல் 104 பாரன்ஹுட் இருக்கும்.இந்த காலகட்டங்களில் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாவர்கள்.
ஆனால் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை துவங்கியும் வெயில் குறையவில்லை. சமீப நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. தினமும் 105 டிகிரி பாரன்ஹுட் தாண்டி வெயில் வாட்டி வதைக்கிறது.
இதையும் படிங்க: வரலாறு காணாத வெப்ப அலை..!! பிரான்சில் ஒரே வாரத்தில் 2,025 பேர் உயிரிழப்பு..!!
இந்த ஆண்டு எல் நினோ காரணமாக தென்மேற்கு பருவமழை பலம் இழந்து உள்ள நிலையில் வெப்பம் கூடுதலாக அதிகரித்து இருக்கிறது.இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன் பாதிப்பு தற்பொழுது மதுரையில் தெரிய துவங்கியுள்ளது
இந்நிலையில் 26 ஆண்டுகளில் இல்லாத வகையில் நேற்று அதிகபட்சமாக 42.5 டிகிரி செல்ஷியல்(108.5 டிகிரி பாரன்ஹீட் ) பதிவானது. குறிப்பாக மதுரை விமான நிலையத்தில் இந்த அளவு பதிவானது. .இதனால் நகர் முழுவதும் வெப்ப அலை வாட்டியது. வாகனங்களில் செல்வோரும் பாதிக்கப்பட்டனர்.
இந்த பாதிப்பு இன்னும் இரண்டு நாட்களுக்கு மேல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது குறிப்பாக வாகனங்களில் செல்பவர்களுக்கு மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.இரவு வீடுகளில் படுக்க முடியவில்லை வெப்பக் காற்று வீசுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பேசிய தமிழ்நாடு அறிவியல் மையத்தின் மாவட்ட செயலாளர் கண்ணன் இந்த வெப்ப அலை குறித்து பொதுமக்கள் பெரிய அளவில் பயப்படத் தேவையில்லை . மதுரை கடலில் இருந்து அதிக தூரத்தில் இருக்கின்ற காரணத்தினால் இது போன்ற கூடுதலான வெப்ப உணரப்படுவதாக தெரிவித்தார் பொதுமக்கள் முடிந்த அளவு பிற்பகல் ஒரு மணியிலிருந்து நான்கு மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் .மேலும் கூடுதலான நீராகாரம் பருக வேண்டும். லேசான உடைகளை அணிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்
எப்போதும் இல்லாத அளவில் கடும் வெப்ப அலை ஏற்ப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
இதையும் படிங்க: இனி தான் ஆட்டம் ஆரம்பம்... மீண்டும் கோர முகத்தை காட்டப்போகும் வெயில்... வெளியானது அதி பயங்கர எச்சரிக்கை...!