மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் தனது ஓட்டை கள்ள ஓட்டு போட்டு விட்டதாக பெண் வாக்காளர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தேர்தல் ஆணையம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து உள்ளது. கள்ள ஓட்டு போடுவதை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
உரிய ஆவணங்கள் காண்பித்தால் மட்டுமே ஓட்டு போட இயலும் என்ற சூழ்நிலை நிலவும் நிலையில் மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் பெண் வாக்காளரின் ஓட்டை, கள்ள ஓட்டு போட்டு விட்டதாக குறி வாக்குவாதம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தனது பெயரில் ஓட்டு போட்டது யார் என்று கேட்டு அந்தப் பெண் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். ஏற்கனவே ஆழ்வார்பேட்டையில் கள்ள ஓட்டு போடுவதாக தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டி இருந்தது சர்ச்சையை கிளப்பியது.

அதற்குள் மதுரவாயல் தொகுதியில் தனது ஓட்டை வேறு ஒருவர் போட்டுவிட்டார் என்றும் கள்ள ஓட்டு போட்டது குறித்தும் பெண் வாக்காளர் வாக்குவாதம் செய்திருப்பது பாதுகாப்பு ஏற்பாடுகளை கேள்விக்குறியாகி இருக்கிறது. மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரம்பாக்கம் பகுதியில் பெண் வாக்காளர் ஒருவர் அதிர்ச்சி தகவலை கொடுத்துள்ளார். உமா மகேஸ்வரி என்ற பெயர் கொண்ட பெண் வாக்காளர் வாக்களிக்க சென்ற போது அவரது பெயரில் வேறு ஒருவர் யாரோ வாக்களித்ததாக கூறியதால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். வாக்களித்தே தீருவேன் என அந்தப் பெண் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: அத்துமீறும் வாக்காளர்கள்..! ஓட்டு போடுவதை சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டதால் சர்ச்சை..!
தனது வாக்கை போட்டது யார் என்றும் தனக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அந்த பெண் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். தனது ஓட்டை கள்ளஓட்டு போட்டது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அந்தப் பெண் தொடர்ந்து வலியுறுத்தி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மதுரவாயில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ரேவந்த் சரண், இதனை தேர்தல் ஆணையம் கருத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: வாக்களிக்க சென்ற பெண்ணுக்கு கத்திக்குத்து..! மதுரையில் பரபரப்பு..!!