சர்வதேச கார் பந்தயங்களில் இந்தியாவின் அடையாளமாகத் திகழும் நடிகர் மற்றும் ரேசர் அஜித் குமாருக்கு, மஹிந்திரா நிறுவனம் ஒரு சிறப்பான கௌரவத்தை அளித்துள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் திரு. ஆர். வேலுசாமி அவர்கள், அஜித்தை நேரில் சந்தித்து உலகின் முதல் 'ஃபார்முலா இ' (Formula E) தீம் கொண்ட Mahindra BE 6 Formula E Edition மின்சார எஸ்யூவி காரைப் பரிசாக வழங்கியுள்ளார்.
சமீபத்தில் துபாயில் நடைபெற்ற கார் பந்தயங்களில் பங்கேற்றுவிட்டுச் சென்னை திரும்பிய அஜித்தை வரவேற்கும் விதமாகவும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான அவரது தீராத ஆர்வத்தைப் பாராட்டும் விதமாகவும் இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கார் சாதாரணமான ஒன்றல்ல; மஹிந்திரா நிறுவனம் கடந்த 12 ஆண்டுகளாக ஃபார்முலா இ பந்தயங்களில் ஈட்டிய அனுபவத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு பிரத்யேக எடிஷன் ஆகும். இது 'டேங்கோ ரெட்' (Tango Red) நிறத்தில் ரேசிங் கிராபிக்ஸ் மற்றும் தனித்துவமான இன்டீரியர் அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழக அரசுக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்! மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் அலட்சியம் காட்டினால் அபராதம்!
இதில் 79 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 500 கி.மீ முதல் 680 கி.மீ (ARAI சான்றிதழ் படி) வரை செல்லும் திறன் கொண்டது. மேலும், வெறும் 6.7 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும் வல்லமை படைத்தது.
ஃபார்முலா இ பிராண்டிங் செய்யப்பட்ட ஸ்போர்ட்டி இருக்கைகள், ரேசிங் கார்களில் இருப்பதைப் போன்ற 'ஸ்டார்ட்/ஸ்டாப்' சுவிட்ச் மற்றும் ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் எனப் பல சொகுசு வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.
அஜித் ஏற்கனவே மெக்லாரன் சென்னா மற்றும் ஃபெராரி போன்ற விலை உயர்ந்த கார்களைத் தனது சேகரிப்பில் வைத்திருந்தாலும், இந்தியாவின் முன்னணி நிறுவனமான மஹிந்திரா, அவரது ரேசிங் திறமைக்காக வழங்கிய இந்த மின்சார கார் அவரது கார் சேகரிப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திமுகவை வீழ்த்த விஜய் வருவாரா? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த க்ரீன் சிக்னல்!