தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவாக விளக்கமளித்தார். மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் நான்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றுள்ளதால் தமிழக மாணவர்களின் MBBS இடங்கள் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் அறிவித்தார். இந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால், இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் நியமனம் செய்யப்படாதது இன்னொரு பிரச்சனை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நடவடிக்கைகள் தமிழக மாணவர்களின் கல்வி உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் எடுக்கப்படுவதாக அமைச்சர் அருண்ராஜ் வலியுறுத்தினார். மாநில அரசின் அனுமதியின்றி அத்தகைய அந்தஸ்து வழங்கப்பட்டதை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவித்தார். இந்த விவகாரம் தமிழ்நாட்டின் மருத்துவக் கல்வித் துறையில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் ட்விஸ்ட்... நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு..!
திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகள் இதில் தங்கள் நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தப் பிரச்னை தொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்தி, உரிய சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் அருண்ராஜின் விளக்கம் மூலம் தெளிவாகியுள்ளது. இது ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கரூரில் CM விஜய் எண்ட்ரி..! திமுகவுக்கு தூக்கம் போச்சா..? பூந்து விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்..!