தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து என்பது வெறும் பாடல் அல்ல. அது தமிழரின் உணர்வு, மொழியின் பெருமை, மாநிலத்தின் அடையாளம். “நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்” என்று தொடங்கும் இப்பாடல், தமிழக அரசு நிகழ்வுகளின் தொடக்கத்தில் முதலில் ஒலிக்கப்படுவது நீண்டகால மரபு. இந்த மரபு தமிழ் மக்களின் உணர்வோடு பின்னிப் பிணைந்துள்ளது. ஆனால் சமீபகாலமாக, சில முக்கிய நிகழ்வுகளில் இப்பாடல் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்படுவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இந்தச் சர்ச்சையின் உச்சமாக அமைந்தது. தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய பெருமகனின் பெயரில் அமைந்த பல்கலைக்கழகத்தில், வந்தே மாதரம் முதலில், தேசிய கீதம் இரண்டாவதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் பாடப்பட்ட சம்பவம் தமிழ் உணர்வாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிகழ்வு வெறும் நிர்வாக ஏற்பாடு என்று கூற முடியாது. அது தமிழ் மொழியின் மரியாதைக்கு ஏற்பட்ட அவமானமாகப் பார்க்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகள், அறிஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் இதை வன்மையாகக் கண்டித்தனர்.

இந்த நிலையில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தமிழ்த்தாய் வாழ்த்திற்கு 3-வது இடம் வழங்கப்பட்டது போல் இனிமேல் அப்படி நடக்காது என அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாக தெரிவித்தார். யார் என்ன தடை போட்டாலும் நானும், முதல்வர் விஜயும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடித்தான் நிகழ்ச்சியை தொடங்குவோம் என்றார்.
இதையும் படிங்க: மருத்துவ படிப்பில் தமிழகத்தின் இடங்கள் இழப்பு...; சரண்டர் ஆனது ஏன்..? தவெக அரசை பூந்து விளாசிய ஸ்டாலின்..!!
தொடர்ந்து பேசிய அவர், தனியார் பள்ளிகள் கட்டணத்தைக் குறைக்கவில்லை என்றால் கட்டண நிர்ணயக் குழு மறு கட்டமைப்பு செய்யப்படும் என கூறினார். அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தில் வாரத்திற்கு ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்கும் கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது என்று கூறியுள்ளார். மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரிப்பதும் இதன் முக்கிய நோக்கம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மிஷன் 2029-க்கு விஜய் ரொம்ப முக்கியம்!! திமுகவை மொத்தமாக முடித்துக் கட்ட தயாராகும் ராகுல் காந்தி! அடுத்த அரசியல் மூவ்!