மத்திய அரசின் ஜிஎஸ்டி மறு சீரமைப்பு மக்களின் சுமையை குறைக்கும் என்று கூறி வருகின்றனர். GST கவுன்சிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை அதிமுக சார்பில் முழு மனதுடன் வரவேற்ப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தங்களை வழிநடத்துவதில் தொலைநோக்குத் தலைமைத்துவம் வகித்ததற்காக பிரதமர் மோடிக்கும் எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் வளர்ச்சி சார்ந்த GST கட்டமைப்பை உறுதி செய்வதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இரண்டு அடுக்குகளுக்கு (5% & 18%) மாற்றம், அத்தியாவசியப் பொருட்கள், சுகாதாரம், வேளாண் உள்ளீடுகள் மற்றும் காப்பீடு மீதான நிவாரணம் எளிமை, நியாயத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்வதாகவும் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கை இணக்கத்தை எளிதாக்கும், நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் கூட்டாட்சி நீதிக்காக குரலை உயர்த்துங்கள் என எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுரை வழங்கி உள்ளார். ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு பாஜக அரசுக்கு பாராட்டு தெரிவித்து இபிஎஸ் வெளியிட்ட பதிவை டேக் செய்த தங்கம் தென்னரசு அறிவுரை வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: கடந்த 4 வருடத்தில் என்னென்ன செஞ்சிருக்கோம் தெரியுமா? திமுக அரசின் திட்ட செயலாக்கம் குறித்த பிரஸ்மீட்…
இபிஎஸ் பாஜகவின் குரலாக மாறிவிட்டார் என்பதற்கு ஜிஎஸ்டி மறுசீரமைப்புக்கு வரவேற்பு தெரிவித்த அவரின் பதிவே சாட்சி என்றும் மத்திய அரசை பாராட்டிய பதிவில் தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி குறித்து ஒரு வரி கூட இபிஎஸ் குறிப்பிடாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: #BREAKING: தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு திட்டங்கள்.. தமிழக அமைச்சரவையில் முடிவு..!