தமிழ்நாட்டின் அரசியல் களத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கைகளில் எப்போதும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், திமுக குடும்ப அட்டைதாரர்களுக்கான எரிவாயு மானியம் தொடர்பான ஒரு முக்கிய வாக்குறுதியை அளித்தது. இதன் படி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூபாய் 100 மதிப்புள்ள எரிவாயு மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த வாக்குறுதி, தமிழ்நாட்டில் வாழும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை செலவுகளை குறைக்கும் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூ.100 எரிவாயு மானியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வில்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.

சமூகநீதியின் காவலர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொண்டு, கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தெருவுக்குத் தெரு தங்களின் பிரச்சார பீரங்கிகளை இறக்கிவிட்ட திமுக, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.100 சிலிண்டர் மானியமாக வழங்கப்படும் என வாக்குறுதி எண் 503 - இல் தெரிவித்தது என்று கூறினார். ஆனால், ஆட்சி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் கடந்தும் கிணற்றில் போட்ட கல்லாக அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் நிலுவையில் நிற்பதும், ஆட்சி முடியப்போகும் இறுதி மாதங்களிலும் ஆளும் அரசு அதை நிறைவேற்றப் போவதில்லை என்பதும் மக்களுக்கு நன்கு தெரியும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: பத்திரப்பதிவுத் துறையில் லஞ்சமா? எதையாவது உளறாதீங்க இபிஎஸ்! அமைச்சர் மூர்த்தி பதிலடி..!
ஏழை மக்களை இப்படி ஏமாற்றி அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து தான் திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டுமா எனும் அப்படியென்ன பதவி மோகம் அவர்களுக்கு என்பது தான் அனைத்து தரப்பினரின் ஒரே ஆதங்கமாக தற்போது ஒலிக்கிறது எனவும் தெரிவித்தார். இப்படிப்பட்ட ஒரு மக்கள் விரோத கட்சிக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிப் பதவி கூட கிடைக்காது என்றும் பாதிக்கப்பட்ட பொதுஜனம் அதை ஒருபோதும் அனுமதிக்காது எனவும் கூறினார்.
இதையும் படிங்க: மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி... அறிவில் சிறந்தவர்கள் தமிழர்கள்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்