தமிழ்நாடு அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதி வரும் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மூலம் பெரும் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, சட்டசபையில் அவரது பேச்சுகள் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
அந்த வரிசையில், இன்று நடைபெற்ற சட்டப்பேரவை அமர்வில் அவர் ஆற்றிய உரை முழுமையாக வைரலாகி, அப்பாவகாணோம் என்பது டிரெண்டிங் ஆனது. அரசியல் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான மோதல், ரசிகர்களின் உற்சாகம் மற்றும் சமூக ஊடகங்களின் வேகத்தைப் பிரதிபலிக்கிறது. இந்த நிகழ்வு நடந்த சூழல் முக்கியமானது.

TVK ஆட்சியமைத்த புதிய அரசில், எதிர்க்கட்சிகளான DMK உள்ளிட்டவை அரசின் செயல்பாடுகள், மின் தடை, சட்டம் ஒழுங்கு போன்ற விவகாரங்களில் கேள்விகளை எழுப்பி வந்தன. குறிப்பாக, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பேச்சுகளை வெளியிட்டனர். முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டசபையில் பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு சிறு கதையை நையாண்டியுடன் பேசினார்.
இதையும் படிங்க: ராகுல்காந்தி கோரிக்கையை நிராகரித்த மு.க.ஸ்டாலின்! தேர்தல் முறைகேடு கடிதத்தில் கையெழுத்திட மறுப்பு!
இந்த நிலையில் முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். ஆண்டுகள் பொது வாழ்க்கையில் மக்களோடு மக்களாகவே நான் இருக்கிறேன் என்றும் நான் சட்டமன்றத்தில் இல்லாவிட்டாலும் மக்கள் மன்றத்தில் இருக்கிறேன் எனவும் தெரிவித்தார். அப்பாவை சட்டமன்றத்தில் தேடாதீர்கள் அவர் மக்கள் மனதில் இருக்கிறார் என்றும் குறிப்பிட்டார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களோடு மக்களாக இருக்கும் இயக்கம் திமுக எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தினமும் ஒருமணி நேரம் பயிற்சி! துறை பற்றி கற்றுக் கொள்ள அமைச்சர்கள் ஆர்வம்!