தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டது. இந்தக் கூட்டணியில் தி.மு.க.வின் உதய சூரியன் சின்னம் மொத்தம் 164 தொகுதிகளில் போட்டியிடும் என்பது உறுதியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மார்ச் 31ம் தேதி முதல் தனது தீவிர பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். இந்தத் தேர்தல் தமிழ்நாட்டின் அரசியலில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிக்கிறது. இது கலைஞர் கருணாநிதியின் பின்னர் ஸ்டாலினுக்கு தனிப்பட்ட மக்கள் ஆதரவைப் பெறும் வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

திமுகவின் கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது என்பது அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் திமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். தொடர்ந்து மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். வேட்பாளர்கள் அறிவித்துள்ளது குறித்து முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதையும் படிங்க: #BREAKING: திமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் யார்? பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான வேட்பாளர் பட்டியல்..!!
அப்போது, தாங்கள் அறிவித்திருக்கும் திமுக வேட்பாளர்கள் மட்டுமல்லாது கூட்டணி கட்சி வேட்பாளர்களும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவித்தார். எத்தனை முனை போட்டி இருந்தாலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்று தெரிவித்தார். திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என கலைஞர் நினைவிடத்தில் இருந்து உறுதி எடுத்துக் கொள்வதாக கூறியுள்ளார். இப்போதும் தமிழ்நாடு vs டெல்லி என்ற போட்டி தான் நிலவுகிறது என்பதை உறுதிப்பட முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை எவை? முழு பட்டியல் வெளியீடு..!!