மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்கள் படி தனிநபர் வருமானத்தில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனை சுட்டி காட்டிய அமைச்சர் தங்கம் தென்னரசு, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொழில்துறை, கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் சமூக நலனில் மாபெரும் சாதனைகளைப் படைத்து நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்வதாக தெரிவித்திருந்தார்.
அந்தச் சாதனை பட்டியலில் மற்றுமொன்றாக, தமிழ்நாடு ரூ.1,96,309 என்ற தனிநபர் வருமான குறியீட்டின் மூலம் மாநிலங்களுக்கிடையே இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என்றும் இந்தச் சாதனையானது, திராவிட மாடலின் தொலைநோக்கு திட்டங்கள், தொழில் வளர்ச்சி, முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களின் வெற்றியைப் பிரதிபலிக்கிறது எனவும் அறிவித்திருந்தார். எல்லார்க்கும் எல்லாம் என்ற உன்னத கொள்கையோடு செயல்பட்டு வரும் நமது திராவிட மாடல் ஆட்சிக்குக் கிடைத்த அடுத்த மணிமகுடம் தான் இது என பெருமிதம் தெரிவித்திருந்த அமைச்சர் தங்கம் தென்னரசு, கடந்த ஆட்சியின் இறுதியாண்டான 2020-21-ல் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 1.43 இலட்சம் ரூபாய் மட்டுமே என்றும் நம் கழக ஆட்சியில், கடந்த நான்கு ஆண்டுகளில் சராசரியாக 8.15 சதவீதம் வளர்ச்சியோடு 2024-25 ஆம் ஆண்டில் தனி நபர் வருமானம் 1.96 இலட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது எனவும் கூறினார்.

2014-15 முதல் 2024-25 வரையிலான கடந்த பத்தாண்டு தேசிய சராசரி வளர்ச்சி விகிதம் 57 சதவீதம் மட்டும்தான் என்று குறிப்பிட்ட அவர், ஆனால், அனைவரையும் வியக்க வைக்கும் வகையில், தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி விகிதம் 83.3 சதவீதம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கவனம் செலுத்தியதால் இவை சாத்தியமானது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: திமுக கதை க்ளோஸ்! 2026ல் மக்கள் வீட்டுக்கு அனுப்ப போறாங்க... எடப்பாடி பழனிச்சாமி உறுதி
இந்த நிலையில், தனிநபர் வருமானத்தில் தமிழக இரண்டாம் இடம் பிடித்துள்ளதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், தேசிய சராசரியை விஞ்சி உள்ளதாகவும் என்றும் கடந்த அதிமுக ஆட்சியின் வளர்ச்சியை காட்டிலும் இரு மடங்கு மிஞ்சி உள்ளதாகவும் தெரிவித்தார். அடுத்து வரவுள்ள திமுக 2.0 ஆட்சியில் தனிநபர் வருமானத்தில் தமிழகம் முதல் இடத்தை பிடிக்கும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உயிரிழந்த அஜித் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!