தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, வேட்பு மனு தாக்கல் செயல்முறை இன்று தொடங்கியுள்ளது. இந்த முதல் நாளிலேயே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பாரம்பரிய தொகுதியான சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இது திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
கொளத்தூர் தொகுதி, திமுகவின் வலுவான கோட்டையாக அறியப்படுகிறது. மு.க.ஸ்டாலின் 2011, 2016 மற்றும் 2021 ஆகிய மூன்று தேர்தல்களிலும் இந்தத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். நான்காவது முறையாக கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் போட்டியிடுகிறார். இந்த முறையும் அவரை மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வைக்கும் வகையில் திமுகவின் முதல் வேட்பாளர் பட்டியலை சனிக்கிழமை அறிவிப்பு வெளியானது.

அந்தப் பட்டியலில் கொளத்தூர் தொகுதிக்கு அவரது பெயரை அறிவித்தபோது, “கொளத்தூர் - முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என்று அவர் குறிப்பிட்டார். கொளத்தூர் தொகுதியில் மீண்டும் முதல்வர ஸ்டாலின் களம் காண்பது அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கொளத்தூர் தொகுதி திமுகவின் கோட்டை என்று சொல்லப்படும் நிலையில், முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து அதிமுகவின் சந்தானகிருஷ்ணன், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வி.எஸ் பாபு ஆகியோர் களம் காண்கின்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் சைதாப்பேட்டையில் களமிறங்கும் மா.சு..!! இன்று வேட்பு மனுத்தாக்கல்..!!
கொளத்தூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் சென்றபோது வழி நெடுகிலும் கட்சிக் கொடிகளுடன் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இடைத்தொடர்ந்து பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த மாநகராட்சி அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: காப்பி அடிச்சது ADMK தான்... திமுக ஆட்சியில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றம்... கனிமொழி MP பிரஸ்மீட்..!!