சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கம் தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறையில் முக்கியமான சாதனையாகக் கருதப்படுகிறது. இந்த அரங்கம் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞர் மு. கருணாநிதி பெயரால் அமைக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி சென்னை மாநிலக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த அரங்கத்தை கட்டித் தருவதாக அறிவித்திருந்தார்.
அப்போது அவர் பேசியதாவது, 2000 பேர் அமரக்கூடிய மாபெரும் அரங்கம் கலைஞர் பெயரில் மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்படும் என்றும், இது கலை, கலாசார நிகழ்ச்சிகளுக்கும் மாணவர்களின் நிகழ்ச்சிகளுக்கும் பயன்படும் என்றும் தெரிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. உயர்கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு அரசின் முயற்சியால் அரங்கம் விரைவில் கட்டி முடிக்கப்பட்டது.

2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்திற்கு நேரில் சென்று இந்த கலைஞர் அரங்கத்தை ஆய்வு செய்தார். இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் 63 கோடி கட்டப்பட்ட கலைஞர் அரங்கத்தை இன்று திறந்து வைத்தார். இந்த அரங்கம் சுமார் 2000 இருக்கைகளைக் கொண்ட பெரிய அளவிலானது. நவீன ஒலி, ஒளி, ஏசி வசதிகள், மேடை அமைப்பு உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உசுரு வேணுமா? 5 ஆயிரம் போதுமா? முடிவெடுங்க மக்களே... சசிகலா ஆதங்கம்..!!
கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பட்டமளிப்பு விழாக்கள், கருத்தரங்கங்கள், கலாசார நிகழ்வுகள், புகழ்பெற்ற கலைஞர்களின் நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு இது மிகச் சிறந்த அமைப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மாநில கல்லூரியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு விடுதி கட்டிடத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். கலைஞர் அரங்கத்தை திறந்து வைத்ததுடன் மாநில கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை முதல்வர் வழங்கினார்.
இதையும் படிங்க: திமுககாரங்களுக்கு பெண்கள் வெறும் சதை பிண்டங்களா? FLIGHT- ல் அத்துமீறிய திமுக கவுன்சிலர்... நயினார் தாக்கு..!