மதுரை மாவட்டம் உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, நாம் தடம் மாறாத கொள்கை கொண்ட கூட்டம் என்றும் அதனால் தான் நம்மை எந்த கோமாளி கூட்டமும் வெல்ல முடியவில்லை.,இனியும் வெல்ல முடியாது என்றும் உறுதிபட கூறினார்.

அடுத்தாண்டு இந்த நேரத்தில் தமிழகத்தில் 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைத்தது என்பது தலைப்பு செய்தியாக இருக்க வேண்டும் என்று கூறிய அவர், கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று ஆணவத்தில் சொல்பவன் நான் அல்ல., ஆணவமோ, மமதையோ எனக்கு எப்போதும் வராது., பணிவு தான் தலைமைத்துவத்தின் அடையாளம் என்று பேசினார்.
இதையும் படிங்க: மண், மொழி காக்க ஒன்றிணைவோம்.. திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை..!

தி.மு.க. இதுவரை அடைந்த வெற்றிகளுக்கெல்லாம் உடன் பிறப்புகள் தான் காரணம் என்று பெருமிதம் தெரிவித்த அவர், சூரியன் எப்படி நிரந்தரமானதோ.,அதேபோல் தி.மு.க.வும் நிரந்தரமானது என்றும் தி.மு.க. எப்படி நிரந்தரமானதோ, அதேபோல் தி.மு.க. ஆட்சியும் நிரந்தரமானது என்ற நிலையை உருவாக்க வேண்டும் எனவும் கூறினார். கடந்த அ.தி.மு.க.- பா.ஜ.க. ஆட்சியில் அதலபாதாளத்திற்கு சென்றுள்ள தமிழகத்தை தாங்கள் மீட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: நம்பி ஓட்டு போட்டவர்களுக்கு திமுக கொடுத்த தண்டனை.. திமுகவை புரட்டி எடுத்த அன்புமணி.!