மதுரையில் நடந்த தி.மு.க., பொதுக் குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, மாநில உரிமைக்கான போராட்டத்தை உறுதியோடு முன்னெடுக்கவும், நமது மண், மொழி, மானம் காத்திடவும், தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாக இணைந்து வருகின்ற சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என தெரிவித்தார். துளியும் சமரசம் இல்லாமல் தமிழகத்தின் உரிமையை காக்கும் பொருட்டு ஓரணியில் தமிழகம் என்ற உறுப்பினர் சேர்க்கையை தி.மு.க வினர் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுக்குழு தீர்மானிப்பதாக கூறினார்.

ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டியின் ஒவ்வொரு ஓட்டு சாவடிகளிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க.,வின் உறுப்பினர்களாக இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்படுவதாகவும், வீடு, வீடாக சென்று அரசின் திட்டங்களையும், உரிமை போராட்டங்களையும் எடுத்து கூறி, தமிழகத்தின் வாக்காளர்களை ஓரணியில் தமிழகம் என்ற முன்னெடுப்பில் இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.
இதையும் படிங்க: நம்பி ஓட்டு போட்டவர்களுக்கு திமுக கொடுத்த தண்டனை.. திமுகவை புரட்டி எடுத்த அன்புமணி.!

தி.மு.க.,வினர் அனைவரும் முழுமூச்சாக உழைத்திட வேண்டும் என்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை பணிகளை வெற்றிகரமாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நகைக்கடன் கொள்கைகள்! மாநில அரசுடன் ஆலோசிக்க முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!