அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே பெரும் மோதல் நிலவி வருகிறது. சமரச உடன்பாடு எட்டப்படும் என்று நினைத்த நிலையில் சண்டை ஓய்ந்த பாடில்லை. அன்புமணி அணி, ராமதாஸ் அணி என இரண்டு பிரிவுகளாக பிரிந்து ஆலோசனைகளை மேற்கொள்வது பொறுப்பாளர்கள் நியமிப்பது உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.

அன்புமணி அணி சார்பில் பாமக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. சேலம் மாவட்ட பாமக பொதுக்குழுவில் எம்.எல். ஏ அருள் பங்கேற்கவில்லை. உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கூட்டம் முடிந்தவுடன் எம்எல்ஏ அருள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையும் படிங்க: #BREAKNG: எல்லாருமே RELEASE... சிவி சண்முகம் கொலை முயற்சி வழக்கில் திண்டிவனம் கோர்ட் அதிரடி உத்தரவு!

அது மட்டுமல்லாமல் எம்எல்ஏ அருள் குணமடைய அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் என்று அன்புமணி பேசியிருந்தார். அதற்கு நான் என்ன செத்தா போய்விட்டேன் என தலத ஆதங்கத்தை எம்எல்ஏ அருள் வெளிப்படுத்தினார்.

அன்புமணி கூட்டத்தில் பங்கேற்காத எம்எல்ஏ அருள், திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்ற பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். மேலும், அருளுக்கு பாமகவின் இணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் எம்எல்ஏ அருளின் கட்சி பதவியை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பறித்துள்ளார். சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அருள் விடுவிக்கப்பட்டார். அந்தப் பதவியில் சரவணன் என்பவரை நியமித்து அன்புமணி ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “யார் கண்ணு பட்டுச்சோ தெரியலையே?” - பாமக பொதுச்செயலாளர் முரளி சங்கர் புலம்பல்...!