தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்கள் அவைக்கு தேர்வு தேர்வான ஆறு உறுப்பினர்களின் பதவி காலம் முடிவடைய உள்ளது. மாநிலங்களவையில் உள்ள பாமகவின் அன்புமணி ராமதாஸ், திமுகவின் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், அதிமுகவின் என்.சந்திரசேகரன், மதிமுகவின் வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூன் 24ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜூன் ஒன்பதாம் தேதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் மாநிலங்களவை வேட்பாளர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அளித்த வாக்குறுதியின் படி ஒரு சீட்டை திமுக அக்கட்சிக்கு ஒதுக்கி உள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: திமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு... மநீம சார்பில் யார் போட்டி தெரியுமா?

அதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதாக கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக உடனான ஒப்பந்தப்படி வைகோ மாநிலங்களவை உறுப்பினரானார். மூன்றாவது முறையாக வைகோ மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்ற இருந்தார். தற்போது அவருக்கு சீட் வழங்கப்படாத நிலையில் அவரின் நாடாளுமன்ற பயணம் முடிவுக்கு வருவதாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மாநிலங்களவை தேர்தலில் தேமுதிக என்ன செய்யும்.? 'பொறுமை'யாக பதில் சொன்ன பிரேமலதா விஜயகாந்த்.!!