தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மூன்று வேலையும் அவர்களுக்கு உணவு வழங்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு கொண்டு செல்லும் வீடியோ ஒன்றை நயினார் நாகேந்திரன் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் திமுக அரசையும் தமிழக முதலமைச்சரையும் கடுமையாக சாடி உள்ளார்.
கோவை காந்திபுரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களுக்குக் கழிவுகளை ஏற்றிச் செல்லும் குப்பை வண்டியில் காலை உணவு அனுப்பி வைத்த திமுக அரசின் ஆணவம் அருவருக்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். துளியும் மனிதாபிமானமற்ற இச்செயலை நான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறினார். இவ்வுலகில் மனிதனாகப் பிறந்த எவருக்கும் இப்படியொரு அவமானம் நேரக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன், கழிவறையில் கூட காசு பார்த்து கொள்ளையடிக்கும் உங்கள் திமுக தலைவர்களை ராஜமரியாதையுடன் நடத்தும் திமுக அரசுக்கு, நமது நாட்டைச் சுத்தப்படுத்தும் தூய்மைப் பணியாளர்களுக்கு நாகரிகமான முறையில் உணவளிப்பதில் என்ன சிக்கல் என்று கடுமையாக சாடினார். எங்களுக்கு உணவளியுங்கள் என்று தூய்மைப் பணியாளர்கள் உங்களைக் கேட்டார்களா என்றும் எதற்காக சோறு போடுகிறோம் என்ற போர்வையில் அவர்களின் சுயமரியாதையை இப்படி சீண்டிப் பார்க்கிறீர்கள் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பட்டப் பகலில் படுகொலை... எப்படி தான் துணிச்சல் வருது? கொந்தளித்த சீமான்...!
சோறு போட்டதைச் சொல்லிக் காட்டிய சுயநலவாதிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் என்றும் அத்தனைக்கும் வரும் தேர்தலில் வட்டியும் முதலுமாக வாங்கிக் கட்டிக்கொள்ளத் தயாராகுங்கள் என்றும் முதலமைச்சர் ஸ்டாலினை சாடினார்.
இதையும் படிங்க: தற்கொலைகளின் தலைநகரம் தமிழ்நாடு... என்னதான் நடக்குது? விளாசிய நயினார்...!