திமுக ஆட்சியில் தினமும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்வதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள் பெரும் அச்சத்தை உண்டாக்குகிறது.
மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் சுட்டிக்காட்டி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார். அத்திவாக்கம் பகுதியில் 14 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தியை படிக்கும் போது அதிர்ச்சியோடு மனதில் பல கேள்விகள் எழுவதாக கூறினார்.

கடந்த ஐந்தாண்டுகளாக தமிழகத்தில் நிகழும் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்களும், வயது வித்தியாசமின்றி தொடரும் பாலியல் வன்கொடுமைகளும் முதலமைச்சர் ஸ்டாலின் செவிகளுக்கு எட்டுகிறதா இல்லையா என்று கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் தினந்தினம் அரங்கேறும் வன்முறைக் குற்றங்களால் தமிழக மக்கள் அச்சத்தில் உறக்கத்தை தொலைத்து தவிக்கையில், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் முதல்வர் மற்றும் அவரது அமைச்சர்களால் எப்படி தினமொரு விழாவில் பங்கேற்க முடிகிறது என்று கேட்டார்.
இதையும் படிங்க: பச்சிளம் குழந்தை முதல் பல்விழுந்த பாட்டி வரை...!! ராட்சசன் ஸ்டாலின்... பாஜக விமர்சனம்..!!
குற்றங்கள் எதும் கண்களுக்கு புலப்படுவதில்லையா அல்லது தேர்தல் பயம் அதிகமானதால் திசைதிருப்பு நாடகங்களில் மட்டும் கவனம் செலுத்தப்பட்டு, சட்டம் ஒழுங்கு தூக்கியெறியப் பட்டுவிட்டதா என்று சாடியுள்ளார். மொத்தத்தில், பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பு பறிபோனதை, நிம்மதியாக வேடிக்கைப் பார்க்கும் திமுக அரசை ஒட்டுமொத்தமாக வீட்டுக்கு அனுப்பினால் மட்டுமே தமிழகம் பேரழிவில் இருந்து மீட்கப்படும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை என்றார்.
இதையும் படிங்க: மதிய உணவில் பல்லி..! தரத்தைக் கூட பார்க்க முடியாத போலி சமூகநீதி அரசு... நயினார் கண்டனம்..!!