நவோதயா பள்ளிகளை தடுப்பதாக முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். கல்வி உரிமையைப் பறிக்கும் இந்தப் பிடிவாதப் போக்கை அரசு கைவிடாவிட்டால், பாரதிய ஜனதா கட்சி மாணவர்களுக்காக போராடுவோம் என கூறினார்.
தமிழகத்தைத் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நவோதயா பள்ளிகள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன என கூறினார். ஊரகப் பகுதி மாணவர்களுக்கு உயர்தரமான சிபிஎஸ்இ கல்வியை முற்றிலும் இலவசமாக வழங்கும் நவோதயா பள்ளிகளைத் தடுக்கும் நோக்கில், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றார்.

நவோதயா பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தங்குமிடம், சத்தான உணவு, சீருடை மற்றும் புத்தகங்கள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன என தெரிவித்து உள்ளார். அத்தகைய பள்ளிகளைத் தடுப்பதன் மூலம், தவெக அரசு திமுகவின் அதே மாணவர் விரோதப் பாதையையே பின்பற்றி, அதன் ‘பி-டீமாக’ செயல்படுவது ஏமாற்றமளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சபாநாயகர் சட்டத்தின் காவலரா..? மதத்தின் பிரதிநிதியா..? நயினார் தாக்கு.!
எனவே, மாநில உரிமை என்ற பெயரில் அரசியல் செய்யாமல், மாணவர் நலனைக் கருதி, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நவோதயா பள்ளிகளுக்குத் தேவையான நிலங்களைத் தவெக அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் தமிழக மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் இந்தப் பிடிவாதப் போக்கை அரசு கைவிடாவிட்டால், பாரதிய ஜனதா கட்சி மாணவர்களுக்காகத் தொடர்ந்து வீதிக்கு வந்து போராடும் எனவும் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: பழனி நில மோசடி விவகாரம்..! கைதான அன்வர்தீன் உயிரிழப்பு... சந்தேகத்தை கிளப்பிய நயினார்..!!