திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சற்று வருகின்றன. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகள் பட்டியலை வெளியிட்டு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகிறார். வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு சொன்னீர்களே செய்தீர்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார். இந்த நிலையில் பூங்கா, மருத்துவமனை போன்ற வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வில்லை என்றும் அவற்றை செய்தீர்களா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளார்.
இதனிடையே, தமிழகத்தில் மஞ்சள் விளைச்சலின் தலைநகராகத் திகழும் ஈரோட்டில் நவீன மஞ்சள் ஆராய்ச்சி நிலையமும், அரசு வேளாண் கருவிகள் உற்பத்தித் தொழிற்பேட்டையும் அமைக்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது என முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மஞ்சள் உற்பத்தியைப் பெருக்குவதிலும், விளைந்த மஞ்சளுக்கான உரிய விலையை நிர்ணயிப்பதிலும் சுணக்கம் காட்டி வரும் திமுக அரசு, மஞ்சள் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க வேண்டும் என்ற அப்பகுதி விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையையும் உதாசீனப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், இத்தனைக்கும் கடந்த தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதி தானே இது என்றும் கேட்டார்.
இதையும் படிங்க: அமித்ஷாவை சந்திக்கும் நயினார்... லிஸ்ட் போட்டாச்சு... இபிஎஸ்- யிடம் பேசியதை விளக்க போராராம்...!
உலகப்புகழ்பெற்ற ஈரோட்டு மஞ்சளுக்கு சர்வதேச சந்தையில் தனி அடையாளம் கிடைக்கும் விதமாகப் புவிசார் குறியீடு வழங்கி மத்திய அரசு கௌரவித்ததாகவும் ஆனால், உலகம் முழுவதும் ஏற்றுமதியாகும் மஞ்சளை விளைவிக்கும் ஈரோட்டு விவசாயிகளைத் தொடர்ந்து திமுக அரசு வஞ்சித்து வருகிறது என்றும் குற்றம் சாட்டினார். இதுமட்டுமன்றி விவசாயத்திற்குத் தேவையான நவீன கருவிகளுக்காக வெளிநாடுகளையும், வெளி மாநிலங்களையுமே தமிழக விவசாயிகள் சார்ந்திருக்கும் நிலையில், வேளாண் கருவிகள் உற்பத்தித் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்ற வாக்குறுதியையும் கடந்த நான்கரை ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டு விவசாயிகளை வஞ்சிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். நாட்டின் முதுகெலும்பான விவசாயப் பெருமக்களை இப்படி நம்பவைத்து ஏமாற்றுவது தான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா என்றும் நயினார் நாகேந்திரன் சரமாரியாக சாடியுள்ளார்.
இதையும் படிங்க: 234 தொகுதிகளிலும் பயிலரங்கம்… வெற்றிக்கான அடித்தளம்… நயினார் நாகேந்திரன் உறுதி…!