தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் 17 வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணி அளவில் தொடங்கிய இந்த கூட்டத்தில் ஆளுநர் அர்லேகர் உரை நிகழ்த்தினார். கடந்த சில ஆண்டுகளாக ஆளுநர் உரை நிகழ்த்தாமல் வந்தது பேசு பொருளாக மாறிய நிலையில் தற்போது ஆளுநர் உரையை வாசித்து முடித்தார்.
தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டு வரும் முன்னெடுப்புகள், புதிய முயற்சிகள் மற்றும் நிலைப்பாடுகள் ஆகியவற்றை ஆளுநர் எடுத்துரைத்தார். ஆளுநர் எப்போதும் இல்லாத வகையில் எழுதி கொடுத்ததை அப்படியே வாசித்து இருக்கிறார் என்றும் தமிழக வெற்றி கழகத்துக்கும் பாஜகவுக்கும் இணக்கமான உறவு இருப்பதை இதுவே காட்டுவதாகவும் எதிர் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில், சட்டப்பேரவை நிறைவடைந்த பிறகு மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி மிகவும் அமைதியாக சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது என தெரிவித்தார். பாஜக - திமுக இடையேதான் நெருக்கமான உறவு இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இன்னும் கொஞ்ச நாள் விட்டிருந்தால் தனியார்மயம்..! அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேச்சு..!!
திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களில் ஆளுநர் நடவடிக்கை இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரிய கோப்புகள் கையெழுத்தாகவில்லை என்றும் குறிப்பிட்டார். எந்த இடத்திலும், யாருக்காகவும் தமிழக முதலமைச்சர் Compromise பண்ண மாட்டார் என அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டமாக தெரிவித்தார். "வாயை திறங்க CM" பேட்ஜ் குறித்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: "9 வருஷமா கட்றாங்க... ஒரு அணையே கட்டிருக்கலாம்"..! மதுரை எய்ம்ஸ் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் கருத்து..!