1960ல் உலக வங்கி முன்னிலையில் சிந்து நதி நீர் பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் மூலம் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் ஆகியவற்றில் இருந்து பாகிஸ்தானுக்கு 80 சதவீத தண்ணீர் கிடைக்கிறது.
20 சதவீத நீர் இந்தியாவுக்கு பயன்படுகிறது. பாகிஸ்தான் பொருளாதாரத்தில் 21 சதவீத ஜிடிபியானது, இந்த நதிகளின் நீர் பாசனத்தால் பயன்பெறும் விவசாயத்தில் இருந்து கிடைக்கிறது. இதனால் பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் ஒப்பந்தம் மிகவும் முக்கியம்.

காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபட்டது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது.
இதையும் படிங்க: இனி பிரண்ட்ஷிப் தான்.. இறங்கி வரும் வங்கதேசம்! பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய யூனுஸ்..!
தண்ணீரும் ரத்தமும் ஒன்றாக ஓட முடியாது என பிரதமர் மோடி அதற்கு விளக்கம் அளித்தார். இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், மத்திய அரசு அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனை அடுத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது.
குறிப்பாக மே 10ம் தேதி இந்தியா நடத்திய மிகப்பெரிய அட்டாக், இப்போதும் உலக அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது. நம் போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறி வைத்து 15 பிரமோஸ் ஏவுகணை மற்றும் வேறு சில ஏவுகணைகளை இந்தியா வீசியது.
இந்தியாவின் இந்த அடியில் தான் பாகிஸ்தானுக்கு பேரிழப்பு ஏற்பட்டது. இதற்கு பிறகு தான் சண்டையை நிறுத்தலாம் என்று இந்தியாவிடம் அடிபணிய ஆரம்பித்தது பாகிஸ்தான். சண்டையை நிறுத்தக்கோரி பாகிஸ்தான் கெஞ்சியதை அடுத்து, இந்தியா சண்டை நிறுத்ததிற்கு ஒப்புக்கொண்டது. ஆனாலும் சிந்து நதிநீரை இந்தியா தற்போதும் நிறுத்தி வைத்துள்ளது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டதால் பாகிஸ்தான் தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டு இருக்கிறது. விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளது. இந்தியா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் அரசு மத்திய அரசின் ஜல் சக்தி துறைக்கு கடந்த மே 10ம் தேதி முதல் 4 கடிதங்களை எழுதி உள்ளது.
அந்தக் கடிதங்கள் மத்திய ஜல் சக்தி துறைக்கு கிடைத்திருக்கிறது. அவை மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன என்று ஜல் சக்தி துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானின் ரபி பருவ பயிர்கள், இந்தியாவின் ஒப்பந்த நிறுத்தத்தால் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக ஒப்பந்த நிறுத்தத்தை மறுபரிசீலனை செய்யும்படி கோரி வருகிறது.

இது தொடா்பாக இந்திய நீா் வளத் துறைச் செயலா் தேபாஸ்ரீ முகா்ஜிக்கு முா்தாசா எழுதிய பல கடிதங்களில், இந்திய எழுப்பிய குறிப்பிட்ட ஆட்சேபங்களைப் பற்றி விவாதிக்க பாகிஸ்தான் அரசு தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளாா். ஆனால், பாகிஸ்தானின் எந்த கடிதங்களுக்கும் இந்தியா இதுவரை பதிலளிக்கவில்லை. எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் தொடா்பாக இந்தியா முன்வைக்கும் பிரச்னைகள் தீா்க்கப்பட்டு, ஒப்பந்தம் முழுமையாக புதுப்பிக்கப்படும் வரை அந்நாட்டுடன் எந்த வகையிலும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட போவதில்லை என்று அரசு உறுதியாக உள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.
இதையும் படிங்க: இந்தியாவில் வீழ்ச்சி.. பாகிஸ்தானில் ஏற்றம்! இதுல மட்டும் அவங்க முந்த முடியும்! எதுல தெரியுமா?