தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள அன்னை நல்வாழ்வு முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த முதியோர் இல்லத்தை செங்கோட்டையைச் சேர்ந்த ராஜதுரை என்பவர் நடத்தி வருகிறார். இங்கு சுமார் 60 முதியோர்கள், பெரும்பாலும் ஆதரவற்றவர்களும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களும், பராமரிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் மதிய உணவு அருந்திய முதியவர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், உடல் நலம் பாதிக்கப்பட்ட அனைவரையும் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சங்கர் கணேஷ், முருகம்மாள், அம்பிகா, தனலட்சுமி ஆதியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் முதியோர் இல்ல காப்பகத்தில் நடத்தி வந்த ராஜதுரையை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: அப்பளம் போல் நொறுங்கிய நீதிபதியின் கார்.. 4 உயிர்கள் பறிபோன சோகம்!!

இந்த சம்பவத்தை தொடர்ந்து முதியோர் இல்லத்திற்கு தென்காசி மாவட்ட காவல்துறை சென்று விசாரணை மேற்கொண்டனர். முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உணவு, குடிநீர் போன்றவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.

இதனிடையே, 42 க்கும் மேற்பட்ட முதியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படும் நிலையில், மேலும் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆட்டம் காட்டும் கொரோனா.. 6 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு.. மக்களே உஷார்..!