பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 23 மாணவிகள் திடீர் வாந்தி, மயக்கம் காரணமாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதிதிராவிடர் நலத்துறை அரசு மாணவியர் விடுதி பட்டுக்கோட்டை ராஜபாளையம் தெருவில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இயங்கி வருகிறது. இந்த விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் இன்று காலை சாதம், குழம்பு, உருளைக்கிழங்கு பொரியல் சாப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இனி குண்டாஸ் தான்... மருத்துவ கழிவுகள் சட்ட திருத்தத்திற்கு ஆளுநர் ரவி ஒப்புதல்!

அதனைத் தொடர்ந்து இந்த மாணவிகள் அனைவரும் பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவிகள் சற்று நேரத்திற்கு முன்பு பள்ளியில் முதலில் திடீரென 4 மாணவிகள் வாந்தி எடுத்து மயங்கினர்.

அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. வாந்தி, மயக்கம் அடைந்த 23 மாணவிகளை ஆசிரியர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்தனர். தற்போது 23 மாணவிகளுக்கும் சிகிச்சையளித்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தாறுமாறாக உயரப்போகும் பெட்ரோல், டீசல் ரேட்! இஸ்ரேல் - ஈரான் சண்டையால் டாப் கியரில் கச்சா எண்ணெய்..!