சென்னை பெரம்பூர் பகுதியில் நடந்த சம்பவம் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் தற்கொலைக்கு முயன்றது, குறிப்பாக ஒரு தாயின் நோய் தாங்க முடியாத வலியால் ஏற்பட்ட மன உளைச்சலின் விளைவாக நடந்தது என்பது தெரிய வந்துள்ளது. சகாயம் செபாஸ்டின் என்பவர், தனது மனைவி ரெக்ஸி பியூலாவுடன் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.
ரெக்ஸி பியூலா பல ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பல மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை எடுத்தும், நோய் குணமாகவில்லை என தெரிகிறது. அவரது வலி தினமும் அதிகரித்து, உடல் மெலிந்து, துன்பத்தில் இருந்ததாக்கப்கூறப்படுகிறது. இதைப் பார்த்து வந்த கணவர் செபாஸ்டின் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

மனைவியின் துயரத்தைத் தாங்க முடியாமல், குடும்பத்தையே ஒரே நேரத்தில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அவர் விஷம் கலந்த கேக் தயாரித்து, மனைவி ரெக்ஸி பியூலா மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு கொடுத்தார். அனைவரும் அதை உட்கொண்ட பிறகு மயங்கி விழுந்து உள்ளனர். இதை அறிந்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் பிறந்தநாள்..! பெரம்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு..! கண்காணிப்பு தீவிரம்..!
ஆனால், விஷத்தின் தாக்கம் மிகுந்திருந்ததால், நால்வரில் இருவர் உயிரிழந்தனர். மீதமுள்ள இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்கள். செபாஸ்டியன் மற்றும் அவரது மகன் உயிரிழந்தனர். தாய் மற்றும் மகள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் இந்தச் சம்பவத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், மனைவியின் புற்றுநோய் துன்பமே இதற்கு முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: எனக்கு ஸ்டாலின் பெயர் வைக்க காரணம் இது தான்..! மணமக்களை வாழ்த்தி முதல்வர் ஸ்டாலின் உரை..!