பாமகவின் நிறுவனராக ராமதாசும் அக்கட்சியின் தலைவராக அவரது மகன் அன்புமணியும் செயல்பட்டு வந்தனர். இதனை எடுத்து அன்புமணியின் தலைவர் பதவியை பறித்து அவரை செயல்தலைவராக மாற்றினார் ராமதாஸ். அது மட்டுமல்லாமல் ராமதாஸின் மகள் வழி பேரன் முகுந்தனுக்கு கட்சிப் பதவி வழங்கப்பட்டது. இதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இப்படி கட்சிப் பதவி, குடும்ப பிரச்சினை என அன்புமணிக்கும் ராமதாஸ் இடையிலான முற்றி வருகிறது. இதற்கு தீர்வு ஏற்படும் என நினைத்த நிலையில் அதுவும் ஏமாற்றத்தை அளித்தது. சமூக தீர்வு ஏற்படும் என ராமதாஸ் கூறி வந்தார். இதற்கிடையே நேற்று நான்தான் சாகும் வரை தலைவராய் இருப்பேன் என்று ராமதாஸ் கூறிவிட்டார். இதற்கிடையில் கட்சியின் நிர்வாகிகளை கூட்டி அன்புமணி ஆலோசனைகளை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: அன்புமணியை பார்த்தாலே BP ஏறுது... கடுப்பாக பேசிய ராமதாஸ்!!

கட்சி நிர்வாகிகளை ராமதாஸ் நீக்குவதும் அன்புமணி அவர்களை கட்சியில் இணைப்பதும் என ஒரே கலவரமாக போனது. இவர்களுக்கு நடுவில் தொண்டர்கள் பெரும் குழப்பத்தை சந்தித்தனர். 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி மற்ற கட்சியினர் செயல்பட்டு வரும் நிலையில் பாமகவின் யார் தலைவர் என்ற பிரச்சனை தான் தலை தூக்கி இருப்பது தொண்டர்களையும் நிர்வாகிகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. இந்த நிலையில் விழுப்புரத்தில் பாமகவினர் பலர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் ஏராளமான பாமகவினர் அதிமுகவில் இணைந்தனர்.

அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையில் மோதல் போக்கு தீராத நிலையில் கட்சியை வழிநடத்த போவது யார் கட்சி தலைவர், எவ்வாறு செயல்பட போகிறது, யார் தலைமையில் செயல்பட போகிறது இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் அறியாமல் தங்களை மாற்றுக் கட்சியில் பாமகவினர் நினைத்து வருவது பாட்டாளி மக்கள் கட்சிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING 100 நாட்கள்... ஜூலை 25 முதல் சூறாவளியை சுழன்றடிக்கப்போகும் அன்புமணி... அதிர்ச்சியில் ராமதாஸ்...!