நெல்லை கேடிசி நகர் பகுதியில் ஜூலை 27ல் தூத்துக்குடி ஆறுமுக மங்கலத்தைச் சேர்ந்த ஐ டி ஊழியர் கவின் வயது 25. என்பவரை நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுர்ஜித், என்ற வாலிபர் தனது அக்காவுடன் ஆன காதலை கைவிட வலியுறுத்தி ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி ஆணவ கொலை செய்தார்.
இதைத் தொடர்ந்து சுர்ஜித் சில மணி நேரத்தில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். காவல்துறையினர் சுர்ஜித்தின் பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன், கிருஷ்ணவேணி ஆகியோர் மீது காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
ஜூலை 28 இறந்த கவினின் உடல் நெல்லை அரசு மருத்துவமனை பிணவரையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து சுர்ஜித்தின் பெற்றோர்களான சரவணன், கிருஷ்ணவேணி இருவரையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கவினின் உறவினர்கள் அவரது உடலை வாங்காமல் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வலுக்கும் எதிர்ப்பு! கவின் ஆணவப் படுகொலை வழக்கு... விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி அதிகாரிகள்!
நேற்று முன்தினமும் காவல்துறையின் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கவினின் உறவினர்கள் இன்று 4வது நாளாக உடலை வாங்க மறுப்பு தெரிவித்து சொந்த ஊரிலேயே இருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த வழக்கை தமிழக அரசு சிபி சிஐடியிடம் வழங்க முடிவு செய்து அதற்கான ஆணை பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து நெல்லை பாளையங்கோட்டை காவல்துறையினர் கவின் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், கைப்பற்றப்பட்ட செல்போன், பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனம், சிசிடிவி ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பல ஆவணங்களை சி பி சி ஐ டி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பெற்றுக்கொண்ட ஆவணங்களின் அடிப்படையில் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் அதிரடி திருப்பம் - சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்...!