புரட்சி பாரதம் கட்சியின் தலைவராக ஜெகன் மூர்த்தி 2002ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். 2006இல் அரக்கோணம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்டார். தொடர்ந்து 2016 மற்றும் 2021 தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த ஜெகன்மூர்த்தி, 2021இல் கே.வி.குப்பம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கே.வி.குப்பம் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக அவர் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், காதல் திருமணம் செய்து வைத்தது தொடர்பான ஆள் கடத்தல் வழக்கு குறித்த விசாரணைக்கு ஜெகன்மூர்த்தி MLA வீட்டுக்கு சென்று போலீசார் விசாரித்தனர். அங்கிருந்து அவர் தப்பி தலைமறைவானதாக கூறப்பட்டது. இதனை அடுத்து முன்ஜாமின் கோரி எம்எல்ஏ பூவை ஜகன் மூர்த்தி மனுத் செய்தார். மனு மீதான விசாரணையில் அடுக்கடுக்கான கேள்விகளை நீதிமன்றம் முன் வைத்தது. இந்த நிலையில், ஜெகன் மூர்த்திக்கு முன்ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைப்பார் என்றும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA முன்ஜாமீன் மனு தள்ளுபடி... சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!

அப்போது அரசியல் காரணங்களால் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், இந்த நாள் வரை தன்மீது எந்த குற்ற வழக்கும் இல்லை என்றும் பூவை ஜெகன் மூர்த்தி தரப்பில் வாதாடப்பட்ட நிலையில், நீங்கள் அரசியலில் இருப்பதால் ஒருவேலை யாரும் புகார் அளிக்காமல் இருந்திருக்கலாம் நீதிபதி தெரிவித்தார். வழக்கு விசாரணைக்கு சரி வர ஒத்துழைப்பு அளிக்காததால் அவருக்கு ஜாமின் கொடுக்க கூடாது என்று போலீசார் தரப்பில் வாதிடப்பட்டது. எனவே, பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

முன் ஜாமின் நிராகரிக்கப்பட்டதால் தன்னை கைது செய்யக்கூடும் என்பதால் எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தி தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியானது. அவரை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு திருவள்ளூர் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், முன்ஜாமின் வழங்கக்கோரி MLA ஜெகன்மூர்த்தி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெளிய விட்டா சாட்சியை கலைத்து விடுவார்! MLA ஜெகன் மூர்த்தி ஜாமீன் தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்!