தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் நடைபெற்ற காதணி விழாவில் பங்கேற்க சென்ற புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் தேனி ஜெயக்குமாரின் கார், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மாங்காட்டில் சாலையோரம் இருந்த சிமெண்ட் கல்லில் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் மீது மோதாமல் இருப்பதற்காக விலகிச் செல்ல முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அமைச்சர் தேனி ஜெயக்குமார் உட்பட அனைவரும் சிறு காயங்களுடன் தப்பிய நிலையில், அந்த வழியாக சென்ற முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அனைவரையும் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சரான சி.விஜயபாஸ்கர் சாலை விபத்தில் யார் சிக்கியதைக் கண்டாலும் ஓடோடிச் சென்று உதவக்கூடியவர், சமானிய மக்கள் நிறைய பேரை தனது காரியிலேயே ஏற்றிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இதையும் படிங்க: ரத்தம் படிந்த கையுறை.. ICU- வில் சுகாதாரத்துறை..! அதிமுக கடும் குற்றச்சாட்டு..!
தற்போது விபத்து அந்தப் பகுதி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த திடீர் விபத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.
இதையும் படிங்க: முருகனுக்கு அரோகரா! அன்பா? அரசியலா.. இபிஎஸ்க்கு வேல் பரிசளித்த அதிமுகவினர்!