தமிழ்நாட்டில் தற்போது மின் கட்டணம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வசூலிக்கப்படுகிறது. இதனிடையே தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான மின் கட்டணம் உயர்த்தப்படலாம் எனத் தகவல் பரவியது. இந்த நிலையில் இதுத்தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் அரசு பல்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை கட்டப்பட்டு வரும் நிலையில், அது விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த கட்டிடத்தில் உள்ள மின்சார துறை பணிகள் தொடர்பாகத் தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மின் வாரியத்தின் நஷ்டம் இப்போது மிக பெரியளவில் குறைந்துள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு மின்வாரியத்தின் நஷ்டம் ரூ.800 கோடியாகக் குறைந்துவிட்டது. அதேநேரம் ஆண்டுக்கு ரூ.17,000 கோடி வரை மானியம் கிடைத்து வருகிறது.
இதையும் படிங்க: அடுத்த 3 மணி நேரத்தில்.. 11 மாவட்டங்களில்.. வானிலை மையம் அதிரடி அலர்ட்!!

மேலும், இது தவிர நஷ்டத்தை ஈடு செய்யத் தமிழக அரசும் ரூ.17,000 கோடி தருகிறது. வருவாயைப் பொறுத்தவரை மின்துறை வருவாய் சுமார் ரூ.70 ஆயிரம் கோடியாக இருக்கிறது. மின் வாரியத்திற்குத் தேவையான நிதியையும் இந்தாண்டு ஒதுக்கப்பட்டுள்ளது. தேவையான நிலுவையில் இருக்கும் ஒப்பந்தங்கள் முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மின் கட்டண உயர்வு தொடர்பாக ஏற்கனவே முதலமைச்சர் விளக்கமளித்து இருக்கிறார். பொதுமக்கள் பயன்பாட்டிற்கான மின் கட்டண உயர்வில் எந்தவொரு மாற்றமும் இருக்காது. மின்துறை இப்போது ஒழுங்கு முறை ஆணையத்தின் வழிகாட்டுதல் பெயரில் செயல்படுகிறது.

ஒழுங்கு முறை ஆணையத்தின் கொள்கை முடிவை முதல்வர் அறிவிப்பார். அதை நாங்கள் செயல்படுத்துவோம். இப்போது தமிழகத்திற்கு 14,800 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் இருக்கிறது. மிக விரைவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் திறன் கொண்ட தெர்மல் யூனிட்டும் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதுபோக உடனடியாக 100 துணை மின் நிலையங்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். காற்றாலை, தண்ணீர், சோலார் மூலமான மின் உற்பத்தியை அதிகரிக்க இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்த விஷயத்தில் உலக நாடுகள் தமிழ்நாட்டை தான் நம்புகின்றன.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!!