டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் ஒரு பெரிய அளவிலான இளைஞர் எழுச்சியாக உருவெடுத்துள்ளது. 2026ஆம் ஆண்டு நீட் தேர்வில் ஏற்பட்ட கேள்விப்பட்டியல் கசிவு மற்றும் பிற தேர்வு ஒழுங்கீனங்கள் தொடர்பாக ஏற்பட்ட கோபம் இந்தப் போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஜூன் 6ஆம் தேதியிலிருந்து ஜந்தர் மந்தரில் தொடங்கிய இந்த அமைதியான போராட்டம், பின்னர் பெரிய அளவிலான மோதல்களுடன் தொடர்கிறது.
இந்தப் போராட்டத்தை முதன்மையாகத் தொடங்கியது 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' என்ற இளைஞர் அமைப்பு. டிஜிட்டல் தகவல் தொடர்பு வியூக நிபுணர் அபிஜீத் திப்கே இதைத் தொடங்கினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒரு கருத்து இந்த அமைப்பின் பெயருக்கும், சமூக ஊடகத்தில் பரவலான ஆதரவுக்கும் காரணமாக அமைந்தது. இந்த அமைப்பு விரைவில் தேர்வு சீர்திருத்தங்கள், கல்வி அமைப்பில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைக் கோரி தெரு போராட்டங்களுக்கு மாறியது.

தற்போது டெல்லியில் போராட்டங்கள் வலுத்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், டெல்லி போராட்டத்தில் மாணவர்களை தாக்கியவர்கள் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவை எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார். இளைஞர்களின் எதிர்காலத்தை மிக அதிகமாக சீர்குலைத்தவர் பிரதமர் மோடி என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்! ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா பதிலடி!
இளைஞர்கள் எதிர்காலத்தை சீரழிக்க முயன்றவர்கள் தப்ப முடியாது என்றும் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். கல்வி முறையை அழிப்பவர்களை பாதுகாத்து அவர்களை ஊக்குவித்தவர் பிரதமர் மோடி என்றும் சரமாரி குற்றச்சாட்டை முன் வைக்கிறார். மேலும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் இளைஞர் எதிர்காலத்தை சீர்குலைத்ததற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: பிரதமர் இல்லம் முற்றுகை! ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி டெல்லியில் கைது!