தமிழ்நாட்டின் அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முற்றிலும் புதிய திசையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தலைமையில் அமைந்த புதிய அரசு, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் நிலையான பெரும்பான்மையைப் பெற்று செயல்பட்டு வருகிறது. இந்தப் புதிய அரசியல் சமன்பாட்டின் ஓர் அங்கமாக, காங்கிரஸ் கட்சி தவெக அரசிடம் ராஜ்ய சபா இடத்தை கோரி வருவது தீவிரமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக தனித்து அதிக இடங்களைப் பெற்றாலும், பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையை எட்டாத நிலையில் காங்கிரஸின் ஐந்து எம்.எல்.ஏக்களின் ஆதரவு மிக முக்கியமானதாக அமைந்தது. காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு நிபந்தனையுடன் ஆதரவு அளித்தது. அந்த நிபந்தனையில் “பொருத்தமான பங்கு” என்பது அடங்கியிருந்தது. இந்த ஆதரவு அறிவிப்பில், அரசு அமைப்பு மட்டுமின்றி, எதிர்கால உள்ளாட்சித் தேர்தல்கள், லோக்சபா மற்றும் ராஜ்ய சபா தேர்தல்களிலும் இரு கட்சிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு தொடரும் என்பதும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பின்னணியில் தான் ராஜ்ய சபா சீட் கோரிக்கை எழுந்துள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் ஒரு ராஜ்ய சபா இடம் காலியாக உள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஜூன் 18 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடத்தை நிரப்புவதற்கான வாய்ப்பு தவெகவுக்கு உள்ளது, ஏனெனில் அது ஆளும் கட்சியாக சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் உள்ளது.
இதையும் படிங்க: கர்நாடக அரசியலில் புதிய அத்தியாயம்... முதல்வராக பதவியேற்றார் டி.கே. சிவக்குமார்..!
இந்த நிலையில், முதலமைச்சர் விஜய்யை சந்தித்து ராஜ்யசபா சீட் கேட்டதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் தெரிவித்தார். அப்போது ராஜ்யசபா சீட் விவகாரத்தை தவிர வேறு எதையும் முதலமைச்சர் விஜய் இடம் பேசவில்லை என்று கூறினார். தீவிரமாக பரிசீலிப்பதாக முதல்வர் விஜய் உறுதியுடன் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். தேர்தலுக்கு முன்பு திமுக விடும் ராஜ்ய சபாஷ் பெற்ற காங்கிரஸ் தற்போது முதலமைச்சர் விஜயிடம் பேசி இருக்கிறது.
இதையும் படிங்க: சூலூர் கொடூரம்..! சிறுமியை சிதைத்த பாவிகள்..!! கைதாகிய 2 பேருக்கும் போலீஸ் காவல்..!!