பாமகவில் அப்பா, மகன் இடையே வெடித்துள்ள மோதல் உச்சகட்ட எட்டியுள்ளது. கட்சியில் அன்புமணிக்கு ஆதரவாக செயல்படுவோரை பாமக நிறுவனர் ராமதாஸ் பொறுப்புகளை பறித்து வருகிறார். கடந்த மே மாதம் 31ம் தேதி கடலூர் மாவட்ட நான்கு மாவட்ட செயலாளர்களும் மாற்றம் செய்து உத்தரவிட்ட ராமதாஸ் தற்போது மீண்டும் புதிய மாவட்ட நிர்வாகிகளை அறிவித்துள்ளார்.

கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆக இருந்த கார்த்திகேயனை நீக்கிய ராமதாஸ், ஈ.கே.சுரேஷ் நியமிக்கப்பட்டார். கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த முத்துக்கிருஷ்ணன் நீக்கப்பட்டு, கோபிநாத் நியமனம் செய்யப்பட்டார். கடலூர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த செல்வ மகேஷ் நீக்கப்பட்டு சசிதரன் என்பவர் நியமிக்கப்பட்டார். கடலூர் மாவட்ட வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த ரவிச்சந்திரன் என்பவர் நீக்கப்பட்டு ஜெகன் என்பவர் நியமிக்கப்பட்டார்
கடலூர் கிழக்கு மாவட்டம் வடக்கு மாநகர தலைவராக முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் கிழக்கு மாவட்ட பேரூர் தலைவராக அருண் ராஜ் என்பவரும், கடலூர் கிழக்கு மாவட்ட மேற்கு மாநகர செயலாளராக சிலம்பரசன் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடலூர் கிழக்கு ஒன்றிய செயலாளராக விஜய் என்பவரும், கடலூர் கிழக்கு மாவட்ட வடக்கு மாநகர செயலாளராக ஆனந்து என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: PATCHUP ஆகும் பாமக? எல்லாரும் பொறுமையா இருங்க.. ட்விஸ்ட் வைத்த ஜி.கே மணி!!
கடலூர் கிழக்கு மாவட்டம் கிழக்கு மாநகர செயலாளராக அருள் என்பவரும், கடலூர் கிழக்கு மாவட்டம் கிழக்கு ஒன்றிய தலைவராக லோகநாதன் என்பவரும்,
கடலூர் கிழக்கு மாவட்டம் தெற்கு ஒன்றிய துணை தலைவராக சிவா என்பவரையும் நியமித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் தெருத்தெருவாக காரில் சுற்றிய ராமதாஸ்.. அமித்ஷாவுக்கே அல்வா..!