தந்தை - மகன் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஒவ்வொரு கட்சியிலும் குடும்பத்திலும் நடப்பது தான் தற்போது பாமகவிலும் நடப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவின் மகளிர் மாநாட்டில் பங்கேற்க அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றும் வன்னியர் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 10ஆம் தேதி மகளிர் மாநாடு பூம்புகாரில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

நான் தான் 46 ஆண்டுகளாக பாமகவை இயக்கி வந்தேன், தன்னை யாரும் பின்னாலிருந்து இயக்கவில்லை என்றும் பாமகவின் சட்ட விதிகளை நான் பார்க்கவில்லை எனவும் விளக்கம் அளித்த ராமதாஸ், வரும் வியாழக்கிழமை அன்புமணி குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பேன் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நம்பி ஓட்டு போட்டவர்களுக்கு திமுக கொடுத்த தண்டனை.. திமுகவை புரட்டி எடுத்த அன்புமணி.!

தொண்டர்களோடு தொடர்ந்து பயணம் செய்வேன் என்று கூறிய ராமதாஸ், ஒவ்வொருவரின் செயல்பாட்டையும் பார்த்து அவர்களை மாற்றுவோம் என்றும் ஒரு சிறுபான்மையினர் பொருளாளராக இருக்க வேண்டும் என்பதற்காக திலகபாமாவை மாற்றியதாகவும், பாமகவிற்கு நானே தலைவர் என அன்புமணி கூறியதற்கு நாளை பதில் கூறுகிறேன் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராமதாஸ் வீடு முன்பு கட்சி நிர்வாகிகள் தர்ணா... பாமகவில் தொடரும் சலசலப்பு; என்னதான் நடக்குது?