பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி நிறுவனர் ராமதாசுக்கும், செயல் தலைவரான அன்புமணிக்கும் வெடித்த மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது அடுத்தடுத்து பரபரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு என்பதில் தொடங்கி, அம்மாவை பாட்டில் வீசி தாக்கினார் என்பது வரை பல குற்றச்சாட்டுக்களால் டேமேஜ் செய்துள்ளார்.

இதனிடையே, 2024ம் ஆண்டு தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க மருமகள் செளமியா அன்புமணியின் செயல் தான் காரணம் என்றும், அதற்காக இருவரும் தனது காலைக் கட்டிக்கொண்டு அழுது சம்மதிக்க வைத்ததாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளது பாமக குழப்பத்த மேலும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: பொதுக்குழு கூட்டி அன்புமணியை நீக்குவேன்... அதிரடி காட்டும் ராமதாஸ்!

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “ 2024 தேர்தலில் அதிமுக கூட்டணி வேண்டும் என்று விரும்பினேன். அன்புமணியும், எடப்பாடி பழனிசாமி இடம் பேசி கூட்டணியை உறுதி செய்திருந்தார். ஆனால், அன்புமணி மற்றும் சௌமியா இருவரும் திடீரென தைலாபுரம் வந்து பாஜக கூட்டணி தான் வேண்டும் என்று காலைப் பிடித்து அழுதனர். இருவரும் நீண்ட நேரம் அழுததால் என்னால் வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை” எனக்கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக-பாமக கூட்டணி என்பது இயல்பான கூட்டணி. இது அமைந்திருந்தால் பாமக 3, அதிமுக 7 இடங்களில் வென்றிருக்க கூடும் என்றும், பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்றால் நீங்கள் தான் எனக்கு கொள்ளி போட வேண்டும் என்று அன்புமணி கூறினார் என்றும் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவராக இருந்த ஜி.கே.மணியை கூட நீக்க வேண்டும் என்று சௌமியா அன்புமணி வந்து சொன்னார். இதை ஜி.கே.மணியிடம் சொன்னேன். பின்னர் ஒன்றரை மாதம் கழித்து அன்புமணிக்கு பட்டாபிஷேகம் நடத்தினேன். பாமக மூத்த நிர்வாகிகளை அன்புமணி மரியாதை குறைவாகவே நடத்தி வந்தார் குறிப்பாக மறைந்த காடுவெட்டி குருவை கூட அவர் உரிய மரியாதை உடன் நடத்தவில்லை என்றும் ராமதாஸ் அடுத்தடுத்து குற்றச்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: அம்மவைவிட மகள் மூத்தவராக இருக்க முடியுமா.? கமலுக்கு ஆதரவாக அன்புமணி ஆவேசம்!