தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நான் என்ன தவறு செய்தேன் என்ற அன்புமணியின் கேள்வியை சுட்டிக்காட்டி ராமதாஸ் கருத்துக்களை எடுத்துரைத்தார். தான் என்ன தவறு செய்தேன் என அன்புமணி கேட்டு தன்னை குற்றவாளியாக ஆக விரும்புவதாக கூறினார். தவறான ஆட்டத்தை தொடங்கி அடித்து ஆள தொடங்கியது அன்புமணி தான் என்றும் இவற்றைப் போகிற போக்கில் தான் சொல்லவில்லை., ஆதாரத்துடன் தான் ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்துவதாக கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்திருந்தால் மூன்று இடங்கள் கிடைத்து இருக்கும் என்றும் அவர்களும் ஆறு முதல் ஏழு இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்று இருப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார். ஆள் உயர கண்ணாடி போல் இருந்த கட்சியை அன்புமணி போட்டு உடைத்து விட்டார் என்று குற்றம் சாட்டிய ராமதாஸ், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு எட்டு பேர் வந்த போதே நான் செத்து விட்டேன் என்று ராமதாஸ் வருந்தினார்.
இதையும் படிங்க: ‘ராஜினாமா செய்’... போன் செய்து மிரட்டிய அன்புமணி... பகீர் கிளப்பிய ராமதாஸ்...!

தனக்கு பொறுப்பு வேண்டாம் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தேவைப்பட்டால் பொதுக்குழுவைக் கூட்டி அன்பு மொழியிலே நீக்குவேன் என்றும் ராமதாஸ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அன்புமணியை மத்திய அமைச்சராக்கியதே தவறு - பொங்கியெழுந்த ராமதாஸ் - பாமகவில் பரபரப்பு...!