கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இருக்கிற நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு கீழ இங்கும் பள்ளி மாணவ மாணவிகளுடைய யோகா பயிற்சி வந்து நெய்வேலியில் இருக்கிற பாரதி மைதானத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சியில அந்த பகுதியில் இருக்கிற அதா என்எல்சி கீழ் இயங்கும் பல்வேறு பள்ளி மாணவ மாணவிகளும் கலந்துகிட்டாங்க. இந்த பயிற்சி முடிந்த பிறகு அந்தந்த பள்ளி மாணவர்களுக்கு அந்தந்த பள்ளி நிர்வாகத்தின் சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

நெய்வேலி என்எல்சி ஜவஹர் பள்ளி மாணவர்களுக்கு அந்த யோகா தினத்தில் பயிற்சியில் ஈடுபட்டதற்காக மாணவ, மாணவிகளுக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. அந்த உணவு பொட்டலங்களை சாப்பிட்ட மாணவ, மாணவிகள் ஒருவர் பின் ஒருவராக மயக்கமடைந்தனர். உடனடியாக அவர்கள் நெய்வேலியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

என்எல்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் இந்த பொது மருத்துவமனையில தற்போது மாணவ, மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. தற்போது வரை 26 மாணவ மாணவிகள் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பட்டுக்கோட்டையில் பரபரப்பு... அரசு பள்ளி மாணவர்கள் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதி!
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல அரசியல்வாதிகளுக்கு தொடர்பு! வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பகீர் குற்றச்சாட்டு