2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில்பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, “ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், தலைமுறைக்கும் மாற்றம் வரும்” என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்று கொண்டிருக்கின்றனர்.
நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆதரித்து சீமான் பரப்புரை செய்தார். அப்போது, 4 முறை நின்று தேர்தலில் போட்டியிட்டு தோற்று இருக்கிறேன் என்று தெரிவித்தார். நீங்கள் தான் தோற்கடித்தீர்கள் என்றும் நான் தோற்கவில்லை., நீங்கள் தான் தோற்றுவிட்டீர்கள் எனவும் மக்களிடம் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நடுக்கடலில் சட்டவிரோத நடவடிக்கை.. நாதக வேட்பாளரை வலை வீசி தேடும் மீன்வளத்துறை- நடந்தது என்ன?
என்னை பார்த்தால் தோற்றவன் போல் இருக்கிறதா என்றும் துவண்டு விட்டேனா எனவும் கேள்வி எழுப்பினார். அல்லது தோல்விக்கு பயந்து இரண்டு தொகுதிகளில் நின்றேனா என்று விஜய் சீமான் மறைமுகமாக வம்பு இழுத்தார். சாரி சொல்லி ஓட்டு தான் ஓட்டு கேட்கிறேனா எனவும் கேட்டுள்ளார். மேலும் ஊழல், லஞ்சம் தொடர்பாகவும் சீமான் பேசினார்.
இதையும் படிங்க: ஆர்.கே. நகர் பரப்புரையில் தேர்தல் விதிமீறல்..! சீமான் மீது பாய்ந்த வழக்கு..!