ஈரோட்டில் வயது முதிர்ந்த தம்பதி ராமசாமி பாக்கியம்மாள் இருவரும் நகை கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் மனவேதனையையும் அழிப்பதாக சீமான் கூறியுள்ளார். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வீட்டில் கூட பாதுகாப்பாக வாழ முடியாத கொடுஞ்சூழல் நிலவுவது தான் திராவிட மாடலா என கேள்வி எழுப்பியுள்ளார்.

பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரை பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே படுகொலை செய்யப்படுகின்றனர். மருத்துவர்கள் மீது மருத்துவமனை வளாகத்திலேயே கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. வளக் கொள்ளைகளுக்கு எதிராகப் போராடும் சமூக ஆர்வலர்கள் நட்டநடு சாலையில் வைத்து வெட்டி சாய்க்கப்படுகின்றனர். உயிருக்கு ஆபத்து உள்ளது என்று காவல்துறையில் புகாரளித்தாலும் கொல்லப்படும்வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பதுதான் வழக்கமாக உள்ளது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதையும் படிங்க: சீமான் தொடர்ந்த வழக்கு... இடைக்கால தடையை நீட்டித்தது சுப்ரீம்கோர்ட்!

ஸ்டாலின் அவர்களே, நீங்கள் கூறிய எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி இதுதானா? குடும்பங்களாகக் குறிவைத்து கொலைகள் நடைபெறுகிறது என்றும் தமிழ்நாட்டில் காவல்துறை என்று ஒன்று உண்மையில் செயல்படுகிறதா? தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா? இவையும் திராவிட மாடலின் சாதனைகளில் வருகிறதா என்ன பல கேள்விகளை முன் வைத்தார்.

திமுக அரசு மீதமுள்ள ஓராண்டிற்காவது சட்டம் ஒழுங்கைச் சீர்படுத்தி மக்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இனியும் இதுபோன்ற கொடூர படுகொலைகள் தொடரா வண்ணம் தடுக்க வேண்டுமெனவும் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: விரைவில் தலை துண்டிக்கப்படும்..! சீமானுக்கு பகிரங்க மிரட்டல்..! தெலுங்கர்களுக்கு எச்சரிக்கை..!