தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கடந்த 5 நாட்களுக்கு முன் விசைப்படகில் மீன்பிடிப்புக்குச் சென்ற மணப்பாடைச் சேர்ந்த, மீனவர்கள் 10 பேர், 5 நாட்களுக்கு மேலாகியும் கரை திரும்பாதது அவர்களின் குடும்பத்தினரிடமும், அப்பகுதி மீனவ மக்களிடமும் பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக சீமான் கூறினார்.
காணாமல் போன மீனவர்களை தேடித்தருமாறு தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகளிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் மீனவ மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் திமுக அரசு எடுக்காத காரணத்தால் மீனவ மக்கள் தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டு இருப்பதையும் சுட்டி காட்டியுள்ளார். தங்கள் உறவினர்களின் நிலையறியாது தவித்து நிற்கும் மீனவச்சொந்தங்களின் வேதனையைத் தீர்க்க இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வன்மையான கண்டனத்துக்குரியது என்றார்.

தமிழ்நாடு கடலோர காவற்படை மூலம் காணாமல் போன மீனவர்களை தேடுவதில் திமுக அரசிற்கு என்ன தயக்கம்? 5 நாட்களாகியும் காணாமல் போன 10 மீனவர்களை மீட்க இந்திய ஒன்றிய அரசிடம் பேசி உரிய தேடுதல் பணிகளை முடுக்கி விடாதது ஏன்? இதுதான் மீனவ மக்களின் நலன் மீது திமுக அரசு கொண்டுள்ள அக்கறையா? இதுதான் நம் மீனவச்சொந்தங்களை பாதுகாக்கும் திராவிட மாடல் அரசின் செயல்முறையா? என அடுக்கடுக்கான கேள்விகளையும் முன் வைத்தார்.
இதையும் படிங்க: ஒரே நாடு, ஒரே வரி, ஒரே ரேசன் கார்டு... ஆனால்...? - மத்திய, மாநில அரசுகளை கிழித்துத் தொங்கவிட்ட சீமான்....!
வெட்கக்கேடு., பணக்காரனுக்கு ஒரு நீதி, பாமரனுக்கு வேறு நீதி என்பது சமூக நீதி அல்ல, அது மனித குலத்திற்கு மாபெரும் அநீதி என்றார். காணாமல்போன மீனவச் சொந்தங்களை விரைந்து மீட்டு அவர்களின், குடும்பத்தினரின் துயர்போக்க வேண்டியது மத்திய, மாநில அரகளின் தலையாயக் கடமை என்றும் விமானப்படை மற்றும் கடற்படை உதவியின் மூலம் காணாமல்போன 10 தூத்துக்குடி மீனவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் பணியைத் துரிதப்படுத்தி, மீனவர்களை விரைந்து மீட்க வேண்டுமென சீமான் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: திமுக - திருடர்கள் முன்னேற்ற கழகம்; அதிமுக - அகில இந்திய திருடர்கள் முன்னேற்ற கழகம்... திருச்சி மாநாட்டில் தெறிக்க விட்ட சீமான்....!