தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்வில் பரிசு பெற்ற மாணவர் ஒருவரின் தந்தை மேடையில் பேசியது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து வந்த தனியார் பள்ளியின் தலைமையாசிரியர் ஒருவர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயை இனி அனைவரும் இளைய காமராசர் என்று அழைக்க வேண்டும் என்று கல்வி விழாவில் பேசினார்.
இதையும் படிங்க: கூட்டணிக்கு வந்தால் துணை முதல்வர் ஆக்குகிறேனு அழைத்தவரே அவர் தான்.. சீமான் பகீர் தகவல்!!

கல்விக்கு இவ்வளவு பெரிய தொண்டு செய்வதால், இளைய தளபதி என்ற பட்டத்துடன் சேர்த்து இளைய காமராசர் என்றும் அழைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேட்டபோது, இதையெல்லாம் பார்க்க வேண்டாம் என்று தான் தன் தாத்தா முன்பே இறந்துவிட்டார் என நக்கலடித்தார்.

ஒரு ஆசிரியருக்கு காமராஜர் பற்றி தெரியவில்லை என்றும் 50 படங்களில் நடித்து காமராஜர் அரசியலுக்கு வரவில்லை என்றும் கூறினார். கலைஞரின் பிறந்த நாள் செம்மொழி நாள் என்றார் முதல்வர்., அவர் கட்சிகாரர்கள் இதை ஏற்கலாம்., மானத்தமிழன் எப்படி ஏற்பார் என்றார். அப்படி செம்மொழி நாள் வேண்டும் என்றால் முதல் முதலில் தமிழ் மொழிக்காக உயிர் நீத்த தாளமுத்து நடராஜன் இறந்த நாளை தான் செம்மொழி நாளாக அறிவிக்க வேண்டும் என கூறினார்.
இதையும் படிங்க: பேரன்புக்காரர்! தயங்காது கருத்துக்களை வெளிப்படுத்தும் பெருந்தகை.. நடிகர் ராஜேஷ் மறைவுக்கு சீமான் இரங்கல்..!