• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 25, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அண்டை மாநிலங்களில் அணைகட்ட கூட தமிழ்நாட்டு மண்.. கொள்ளையின் கோரமுகம்.. சீமான் காட்டம்..!

    திருத்தணி பட்டாபிராமபுரம் ஏரிப் பகுதியில் நடைபெறும் மணல் கடத்தலை தமிழ்நாடு அரசு தடுத்துநிறுத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.
    Author By Nila Wed, 25 Jun 2025 13:52:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    seeman-statement

    திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே பட்டாபிராமபுரம் ஏரிப் பகுதியிலிருந்து சவ்வூடு மணல் கொள்ளை நடைபெறுவதை தமிழக அரசு தடுக்கவில்லை என்றும் இதற்கு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தொடர்பாக அவர் விடுத்துள்ள கண்டன அரை கிலோ கூறியிருப்பதாவது; சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் மற்றும் பயண நேரத்தைக் குறைப்பதற்காக இருவழிச் சாலையானது நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும் நிலையில், அதற்கு தேவையான சவ்வூடு மணலானது திருத்தணி பட்டாபிராமபுரம் ஏரிப் பகுதியிலிருந்து எடுக்கப்படுகின்றது.

    5 அடி ஆழம் வரை மட்டுமே மணல் எடுக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் சாலை ஒப்பந்த நிறுவனத்தாரால் 12 அடி ஆழத்திற்கும் அதிகமாக சவ்வூடு மணல் நாள்தோறும் வெட்டி எடுக்கப்படுகிறது. அதிகளவில் மணல் கொள்ளையடிக்கப்படுவது குறித்து திருத்தணி பகுதி மக்கள் புகாரளித்ததையடுத்து கோட்டாட்சியரால் அப்பகுதியில் மணல் அள்ள தடையும் விதிக்கப்பட்டது. 

    MK Stalin

    ஆனால் அதன் பிறகும் பட்டாபிராமபுரம் ஏரிப்பகுதியில் தொடர்ச்சியாக மணற்கொள்ளை நடைபெற்று வருவதை தமிழ்நாடு அரசால் தடுக்க முடியவில்லை என்பது திமுக அரசின் நிர்வாகத்திறமை இன்மையையே காட்டுகிறது. மணல் என்பது இயற்கை அளித்த கொடை., பூமித்தாயின் மடி. அதுவே உலகின் தலைசிறந்த வடிகட்டியுமாகும். நீராதாரத்தைத் தக்கவைக்கும் பெரும் சேமிப்புக்கலனாகவும் அது விளங்குகிறது. அத்தகைய இன்றியமையாத மணல் தமிழகத்தின் அத்தனை ஆறுகளிலிருந்தும் திருட்டுத்தனமாக அள்ளப்பட்டு தமிழகத்தின் ஜீவநதிகள் யாவும் இன்றைக்குச் செத்துக் கொண்டிருக்கின்றன.

    இதையும் படிங்க: சாத்தான்குளம் படுகொலை வழக்கு; நீதிக்காக இன்னும் எத்தனை வருஷம் காத்திருக்கனும்? சீமான் நறுக் கேள்வி!!

     ஒரு கியூபிக் மீட்டர் மணலை அள்ளினால் மூன்று கியூபிக் மீட்டர் நிலத்தடி நீர் மட்டம் கீழே போகும் என்பது இயற்கை விதி. இதனைக் கடைபிடிக்காது வரைமுறையற்றுத் தொடர்ச்சியாக மணலை அள்ளுவதன் மூலம் சுற்றுச்சூழல் சமநிலை சீர்கேட்டு நிலத்தடி நீர்மட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அண்டை மாநிலமான கேரளாவில் மணல் கொள்ளை என்பதே முற்றிலுமில்லை என அறுதியிட்டுச் சொல்கிற அளவுக்கு அந்த மண்ணின் ஆட்சியாளர்கள் தங்களது இயற்கை வளத்தைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.

     

    MK Stalin

    ஆந்திராவிலும், கேரளாவிலும்கூட மணல் அள்ளுவதற்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் போடப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்திலோ மணல் கொள்ளையானது ஆறுகள் மட்டுமின்றி ஏரிக்கரை பகுதிகளில் கூட கட்டுக்கடங்காமல் வெட்டி அள்ளப்பட்டு தமிழகத்தின் இயற்கை வளம் கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும், கர்நாடகாவுக்கும் திருட்டுத்தனமாகக் கொண்டு செல்லப்பட்டுக் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

    தமிழகத்திற்குரிய நீராதாரங்களைத் தடுத்து அண்டை மாநிலங்கள் அணை கட்டுவதற்குக்கூடத் தமிழகத்திலிருந்துதான் மணல் செல்கிறது என்பதன் மூலம் மணல் கொள்ளையின் கோரமுகத்தை அறிந்து கொள்ளலாம். மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்ற காவலர்களையும், அதிகாரிகளையும் சமூக விரோதிகள் அடித்துக்கொலை செய்கிறார்களென்றால் மணல் கொள்ளையர்களின் கை ஓங்கி அவர்கள் எந்தளவுக்கு பயமின்றி திமிறி நிற்கிறார்கள் என்பதை அறிய முடியும். அவர்களுக்கு இத்தகைய துணிவு திமுக ஆட்சியாளர்களின் துணையில்லாது வந்திருக்குமா என சீமான் கேள்வி எழுப்பினார்.

    MK Stalin

    தமிழ்நாட்டில் நிகழும் திராவிட கட்சிகளின் ஆட்சி மாற்றம் இந்த மணல் கொள்ளையர்களை ஒருபோதும் பாதிப்பதில்லை. திமுக ஆட்சியாக இருந்தாலும், அதிமுக ஆட்சியாக இருந்தாலும் மணல் கொள்ளையர்களின் ஆதிக்கத்திற்கு எவரும் முடிவுகட்ட முனைவதில்லை. ஆற்று மணலைக் கொள்ளையடித்தால் குண்டர் சட்டம் பாயும் என்று அரசு ஒப்புக்குச் சொல்கிறதே ஒழிய, மணல் கொள்ளையர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததாக இதுவரை செய்தியில்லை.

    மாறாக, மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடுகிற சமூக ஆர்வலர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மீதுதான் வழக்குகள் பாய்ச்சப்படுகின்றன என்பதன் மூலம் இந்த அரசு யாருக்கானது என்பது எளிதாக விளங்கும். ஆகவே, திருத்தணி பட்டாபிராமபுரம் ஏரிப் பகுதியில் கட்டுங்கடங்காது நடைபெறும் மணல் கடத்தலை தடுத்துநிறுத்த தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

    இதையும் படிங்க: ஶ்ரீகாந்த் கைது.. சீமான் சொன்ன வார்த்தை..! விழிப்பிதுங்கிய முக்கிய தலைகள்..!

    மேலும் படிங்க
    மணல் கொள்ளையர்கள் ஆதிக்கம்; யாரும் முடிவுகட்ட தயாராக இல்லை... சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு!!

    மணல் கொள்ளையர்கள் ஆதிக்கம்; யாரும் முடிவுகட்ட தயாராக இல்லை... சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு!!

    அரசியல்
    #BREAKING: இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு... சிபிஎஸ்சி அதிரடி உத்தரவு..!

    #BREAKING: இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு... சிபிஎஸ்சி அதிரடி உத்தரவு..!

    இந்தியா
    ஜோதிகா இடுப்பு காட்டலாம் என் மகள் காட்ட கூடாதா..? நடிகை வனிதா விஜயகுமார் பேச்சால் பரபரப்பு..!

    ஜோதிகா இடுப்பு காட்டலாம் என் மகள் காட்ட கூடாதா..? நடிகை வனிதா விஜயகுமார் பேச்சால் பரபரப்பு..!

    சினிமா
    எஸ்.கே கொடுத்த பிரமாண்ட பரிசு..! ஆச்சர்யத்தில் உறைந்த "குட் நைட்" பட இயக்குனர்..!

    எஸ்.கே கொடுத்த பிரமாண்ட பரிசு..! ஆச்சர்யத்தில் உறைந்த "குட் நைட்" பட இயக்குனர்..!

    சினிமா
    #BREAKNG: எல்லாருமே RELEASE... சிவி சண்முகம் கொலை முயற்சி வழக்கில் திண்டிவனம் கோர்ட் அதிரடி உத்தரவு!

    #BREAKNG: எல்லாருமே RELEASE... சிவி சண்முகம் கொலை முயற்சி வழக்கில் திண்டிவனம் கோர்ட் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    “யார் கண்ணு பட்டுச்சோ தெரியலையே?” - பாமக பொதுச்செயலாளர் முரளி சங்கர் புலம்பல்...!

    “யார் கண்ணு பட்டுச்சோ தெரியலையே?” - பாமக பொதுச்செயலாளர் முரளி சங்கர் புலம்பல்...!

    அரசியல்

    செய்திகள்

    மணல் கொள்ளையர்கள் ஆதிக்கம்; யாரும் முடிவுகட்ட தயாராக இல்லை... சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு!!

    மணல் கொள்ளையர்கள் ஆதிக்கம்; யாரும் முடிவுகட்ட தயாராக இல்லை... சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு!!

    அரசியல்
    #BREAKING: இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு... சிபிஎஸ்சி அதிரடி உத்தரவு..!

    #BREAKING: இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு... சிபிஎஸ்சி அதிரடி உத்தரவு..!

    இந்தியா
    #BREAKNG: எல்லாருமே RELEASE... சிவி சண்முகம் கொலை முயற்சி வழக்கில் திண்டிவனம் கோர்ட் அதிரடி உத்தரவு!

    #BREAKNG: எல்லாருமே RELEASE... சிவி சண்முகம் கொலை முயற்சி வழக்கில் திண்டிவனம் கோர்ட் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    “யார் கண்ணு பட்டுச்சோ தெரியலையே?” - பாமக பொதுச்செயலாளர் முரளி சங்கர் புலம்பல்...!

    “யார் கண்ணு பட்டுச்சோ தெரியலையே?” - பாமக பொதுச்செயலாளர் முரளி சங்கர் புலம்பல்...!

    அரசியல்
    வாழ்த்திய 140 கோடி மக்கள்.. உற்சாகமாக புறப்பட்ட விண்வெளி நாயகன் 'சுக்லா'.. பிரதமர் மோடி வாழ்த்து..!

    வாழ்த்திய 140 கோடி மக்கள்.. உற்சாகமாக புறப்பட்ட விண்வெளி நாயகன் 'சுக்லா'.. பிரதமர் மோடி வாழ்த்து..!

    இந்தியா
    வார்ரே வா... நானும் திராவிடர் தாங்க! வானதி ஸ்ரீனிவாசன் ஒரே போடு...!

    வார்ரே வா... நானும் திராவிடர் தாங்க! வானதி ஸ்ரீனிவாசன் ஒரே போடு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share