கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தென் மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பாஜக தென் மாவட்டங்களில் அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக பாஜக தலைமை நயினார் நாகேந்திரனை மாநில தலைவராக நியமனம் செய்துள்ளது. ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலின் போது கன்னியாகுமரி, நெல்லை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் 2வது இடத்தை பிடித்தனர்.

இதனால் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் மதுரை வந்த அமித் ஷா மதுரை தெற்கு, மதுரை மேற்கு மற்றும் மதுரை கிழக்கு ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மதுரை தெற்கு தொகுதியில் ஏற்கனவே செளராஷ்டிரா சமூக வாக்குகள் அதிகமாக உள்ள நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகள் அதிகரித்திருந்தன. அதிமுகவை விடவும் பாஜக அதிக வாக்குகளை பெற்றிருந்தது. இதனால் மதுரை மாவட்ட பாஜகவில் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது யார் என்ற போட்டி நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி கைக்குச் சென்ற முக்கிய கடிதம்... வசமாக சிக்கிய செல்லூர் ராஜூ!

இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா அல்லது அதிமுக ஆட்சியா என்பதை எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும். கூட்டணி தொடர்பாக கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு அறிவுறுத்தி உள்ளார். ஏற்கனவே கூட்டணி மற்றும் ஆட்சி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி விளக்கம் கொடுத்துள்ளார்.

அண்ணாமலையின் கருத்து குறித்தும் எடப்பாடி பழனிசாமி பேசுவார். மதுரை மேற்கு தொகுதிக்காக திமுக ஆட்சியில் என்ன செய்யப்பட்டது என்பதை மக்கள் அறிவார்கள். அதனால் அமைச்சர் மூர்த்தி என்ன செய்கிறார் என்பதும் தெரியும். மக்கள் மீண்டும் ஏமாற மாட்டார்கள். அதிமுக - பாஜக கூட்டணி குறித்து பேச வேண்டாம் என்று கூறிவிட்டார்கள் என்று தெரிவித்தார். அப்போது சொந்த தொகுதியில் போட்டியிடுவீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு செல்லூர் ராஜூ பதில் அளிக்கமால் மழுப்பி சென்றது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 2026ல் கூட்டணி பாஜக ஆட்சிதான்... குண்டை தூக்கி போட்ட அண்ணாமலை!!