இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக, சுதந்திரப் போராட்டத்தில் இருந்து தொடங்கி தொழிலாளர் உரிமைகள், சமூக நீதி, விவசாயிகளின் நலன் என பல தளங்களில் அயராது பாடுபட்டவர் நல்லக்கண்ணு. அவரது வாழ்க்கை ஒரு உண்மையான போராளியின் பயணமாகவே இருந்தது. 101 வயதை எட்டிய இந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர், வயது மூப்பால் ஏற்பட்ட பல்வேறு உடல் பிரச்சினைகளால் கடந்த ஆறு மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்தார்.
குறிப்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டில் தவறி விழுந்ததால் தலையில் ஏற்பட்ட காயம், பின்னர் மூச்சுத் திணறல், நுரையீரல் தொற்று போன்ற பிரச்சினைகள் அவரை பலமுறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றன. பிப்ரவரி 1-ம் தேதி இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அங்கு தொடர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த ஒரு-இரண்டு நாட்களாக அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவர்கள் தீவிரமாக முயற்சி செய்த நிலையில் சிகிச்சை பலனின்றி நல்ல கண்ணு இன்று உயிரிழந்தார். அவரது மறைவு பேரிழப்பு என அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மீனவர்களை தண்டிக்கும் மத்திய அரசு..! அவ்ளோ அலட்சியம்... செல்வப் பெருந்தகை தாக்கு..!!
நல்லகண்ணு மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை இரங்கல் தெரிவித்தார். அவருடைய வாழ்க்கையை பின்தொடரும் வகையில் அவருக்கான மணிமண்டபங்கள் அமைக்க வேண்டும் என்றும் அடுத்த தலைமுறை நல்லகண்ணு பற்றி படிக்கும் அளவிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் முதுபெரும் தலைவரான நல்லக்கண்ணுவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்த தேசம் பார்த்திடாத உயர்ந்த மனிதர் என்று புகழாரம் சூட்டி செல்வப் பெருந்தகை தனது இரங்கலை தெரிவித்தார்.
இதையும் படிங்க: காவிச் சிந்தனையில் பழனிச்சாமி... வள்ளுவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? கிழித்து தொங்கவிட்ட செல்வப் பெருந்தகை..!