சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் அமோக வெற்றி பெற்று பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக்கழகத்தின் (தவெக) தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநரின் முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இந்த விவகாரம் தீவிர விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் ஆளுநரை இரண்டு முறை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகளின் போது, தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தனது கட்சிக்கு ஆட்சி அமைக்க உரிமை உண்டு என்பதை விஜய் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஆளுநரின் தரப்பில் இதுவரை உறுதியான பதில் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழலில், விஜயை பதவியேற்க அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை பல்வேறு தரப்பினரிடமிருந்து எழுந்துள்ளது.

அரசியல் பார்வையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் த.வெ.க. ஆதரவாளர்கள் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் தங்கள் ஆதரவை பதிவு செய்து வருகின்றனர். “மக்கள் விருப்பத்துக்கு எதிராக ஆளுநர் செயல்படக் கூடாது” என்கிற குரல்கள் மேலோங்கியுள்ளன. இதனிடையே, சென்னை பனையூரில் அமைந்துள்ள தவெக மாநில அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கட்சியின் நிர்வாகக் குழுத் தலைவர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பலரும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: ”சாம்ராஜ்யம் அழியும் அதை யாராலும் தடுக்க முடியாது”... திமுக, அதிமுகவுக்கு சவால்விட்ட செங்கோட்டையன்...!
கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், “இன்னும் ஒரு இரு நாட்களில் நல்ல செய்தி வரும். அனைவரும் பொறுமையுடன் இருக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் எந்தவித சோர்வுக்கும் இடம் கொடுக்கக் கூடாது” என்று உற்சாகமூட்டினார். தவெகவின் இந்த வெற்றி தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. முதல் முறையாக போட்டியிட்ட கட்சி என்ற வகையில் 108 இடங்களை கைப்பற்றியது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஆட்சி அமைக்கும் அழைப்பு தாமதமாகும் நிலையில், கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே ஆர்வமும், எதிர்பார்ப்பும் உச்சமாக உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகளிடையேயும் கருத்து மோதல்கள் எழுந்துள்ளன. சில கட்சிகள் ஆளுநரின் நடவடிக்கையை வரவேற்றாலும், பெரும்பான்மை கட்சியின் உரிமையை மதிக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர். அடுத்த சில நாட்களில் இந்த அரசியல் சூழல் எப்படி மாறும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: தமிழகம் இதுவரை காணாத விசில் புரட்சி நடக்கும்..! செங்கோட்டையன் திட்டவட்டம்..!