டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக அமைதியான முறையில் பேரணி நடத்த முயன்ற 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (CJP) அமைப்பின் இளைஞர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய அத்துமீறல் மற்றும் தடியடித் தாக்குதலுக்கு திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில், டெல்லியில் மாணவர்களின் உரிமைப் போராட்டம் ஒடுக்கப்படும் விதத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக அமைதியான முறையில் பேரணியில் பங்கேற்ற சிஜேபி அமைப்பின் இளைஞர்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிட்டுள்ள அத்துமீறலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். டெல்லியிலிருந்து வரும் வன்முறை சார்ந்த காட்சிகள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் அதிர்ச்சியளிக்கின்றன.
இதையும் படிங்க: "உண்ணாவிரதத்தை கைவிட தயார்! ஆனா.. மத்திய அரசுக்கு சோனம் வாங்சு விதித்த நிபந்தனைகள்!
நாட்டின் எதிர்காலமான மாணவர்களின் நியாயமான கவலைகளைக் கேட்டறிந்து அதற்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, மத்திய அரசு தனது ஏதேச்சதிகாரக் காவல்துறையைக் கொண்டு தடியடி மூலம் பதிலளிக்கிறது. இது ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்தில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்."
மேலும், நீட் தேர்வுக்கு எதிரான தங்களது நீண்டகாலப் போராட்டத்தை நினைவு கூர்ந்த அவர், கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக (10 ஆண்டுகளுக்கும் மேலாக), நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இன்று நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் ஒலித்த அதே குரல், தற்பொழுது நாட்டின் தலைநகரான டெல்லி வரை ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களின் குரலாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த இளைஞர்களின் கோரிக்கை மிகவும் தெளிவானது. அதற்குச் செவிசாய்த்து உடனடியாக நீட் தேர்வைத் தடை செய்ய வேண்டும் (#BanNEET) என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: "அடக்குமுறையால் இளைஞர்களின் குரலை ஒடுக்க முடியாது!" டெல்லியில் CJP மீதான தடியடிக்கு திமுக கண்டனம்!