சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பக்கவாதம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா அவர்களை, திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

கடந்த ஜனவரி 30-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தனியார் ஊடக நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தபோது, ஹெச். ராஜா திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார். அவருக்கு மூளை ரத்தக் குழாயில் பாதிப்பு ஏற்பட்டு பக்கவாதம் உண்டானதை அடுத்து, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: எச்.ராஜா எப்படி இருக்காரு..?? நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!
இன்று மாலை மருத்துவமனைக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ஹெச். ராஜா அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் ஹெச். ராஜாவின் குடும்பத்தினரைச் சந்தித்த ரஜினிகாந்த், அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். மேலும், இன்று காலை தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களும் தரிசனம் முடித்து வந்து நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, ஹெச். ராஜா அவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. நரம்பியல் நிபுணர்கள் குழு அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தற்போது அவர் தனது குடும்பத்தினருடன் பேசும் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சாதிய கொடுமை..! 8ஆம் வகுப்பு மாணவன் தீயில் தூக்கி வீசப்பட்ட கொடூரம்..!