திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 'கர்தவ்ய த்வார்' என்ற இந்திப் பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளத்தில் மத்திய அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார். இந்தித் திணிப்பு வெறி எல்லை மீறிச் செல்வதாக அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
திருச்சி ரயில்வே அலுவலகத்தில் அகற்றப்பட்டது வெறும் இந்தி எழுத்துகள் மட்டுமல்ல; வடநாட்டின் ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்" என முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார். அடிமைத்தனத்தின் அடையாளமாய் அவர்களுக்கு (மத்திய அரசுக்கு) துணை நின்று துரோகம் இழைப்போர், வரும் தேர்தலில் மக்களால் வேரோடு அகற்றப்படுவார்கள்" என அதிமுக உள்ளிட்டக் கூட்டணி கட்சிகளை மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.
Out of Control தமிழ்நாடு: "டெல்லியின் ஆணவத்திற்குத் தமிழ்நாடு என்றைக்குமே 'Out of Control' தான். தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்ப்பவர்களுக்குத் தகுந்தப் பாடம் புகட்டப்படும்" என அவர் எச்சரித்துள்ளார்.

ஒரே மொழி - மூன்று வரிவடிவம்: "இந்திப் பெயர்களையே தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் 'ஒரே மொழி - மூன்று வரிவடிவம்' என்ற இழிவானச் செயலை மத்திய அரசு கைவிட வேண்டும். உடனடியாக முறையானத் தமிழ்ப் பெயர்களையே பயன்படுத்த வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: வென்றது தமிழ்! திருச்சி ரயில்வே அலுவலகத்தில் சர்ச்சைக்குரிய இந்தி பெயர் நீக்கம்!
இந்த விவகாரம் தொடர்பாகத் ஏற்கனவே மதுரை எம்.பி சு. வெங்கடேசன் மற்றும் திருச்சி சிவா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், முதல்வரின் இந்தப் பதிவு தமிழக அரசியல் களத்தில் அனலைக் கூட்டியுள்ளது.
இதையும் படிங்க: இந்தி திணிப்பால் மொழிகள் அழிகின்றன! அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடும் எச்சரிக்கை!